சிவகங்கை, ஆக.31- தலித் மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆகஸ்ட் 31 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . கடந்த ஆகஸ்ட் 15 அன்று திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி வட்டம், ஆத்துப்பக்கம் மற்றும் நேமலூர் ஆகிய ஊராட்சி மன்றங்களில் தேர்வு செய்யப்பட்ட தலித் தலை வர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை சாதிய வாதிகள் தடுத்துள்ளனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் தலையீட்டுக்கு பிறகு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆத்துபாக்கம் சென்று தலித் ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றுவதை உறுதி செய்திருக்கிறார். ஆனால் தடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. போராட்டம் அறிவிப்பு காரணமாக ஆகஸ்ட் 30 தேதி ஆதிக்க சாதியவாதிகள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைதுசெய்யப்பட்டனர். இதே மாவட்டம் நேமல்லூர் ஊராட்சியில் இன்னும் தலித் தலைவர் கொடி ஏற்ற முடிய வில்லை. இதே காலத்தில் திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை,கோவை மாவட்டம் ஜெ.கிருஷ்ணா புரம், திருவண்ணாமலை மாவட்டம் அரியாக்குஞ்சூர், திருப்பூர் மாவட்டம் கவுண்டச்சி பாளையம்,சேலம் மாவட்டம் டி.கோணகம்பாடி ஆகிய ஊராட்சிகளிலும் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும்,அவமதிப்பும் ஏற்பட்டுள்ளது.
எனவே மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப் பட்ட தலித் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு உரிய பாது காப்பு வழங்குவதோடு அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு மாநில அரசு உத்தரவாதமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 31 அன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. சிவகங்கையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுசெயலாளர் கே. சாமுவேல்ராஜ், துணைப் பொதுச்செயலாளர் மு.கந்தசாமி, உசிலம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத்தலைவர் த.செல்லக்கண்ணு, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொரு ளாளர் இ.மோகனா, கோவையில் மாநில துணைப்பொதுச்செயலாளர் யுகே. சிவ ஞானம், தஞ்சையில் மாநில துணைப் பொதுச்செயலாளர் சின்னைபாண்டியன் , திரு வண்ணாமலையில் செல்வன்,கடலூர் மாவட்டத் தில் 8 மையங்களிலும் , தேனி மாவட்டத்தில் 8 மையங்களிலும், விழுப்புரத்தில் 4 மையங்களிலும், ஈரோடு மாவட்டத்தில் 3 மையங்களிலும் வேலூரில் 5 மையங்களிலும் விருதுநகர் மாவட்டத்தில் 7 மையங்களிலும் ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 மையங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 மையங்களிலும் திருப்பூர் மாவட்டத்தில் 2 மையங்களிலும், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசும்போது, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என அறிவித்த பின்னணியில் தான் ஆத்துபாக்கம் தலித் ஊராட்சி மன்றத் தலைவரை தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்த சாதியவாதிகள் மீது வழக்கு பதிவு செய்து மூன்று பேர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றார் . தமிழகம் முழுவதும் நடைபெற்ற கண்டனப்போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து பகுதியை சேர்ந்தவர்களுக்கும் ,குறிப்பாக முன்னணி அறிவித்த போராட்டத்தில் பங்கேற்ற ஜனநாயக இயக்கங்கள் மற்றும் தலித் அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.