நிரந்தர தொழிலாளர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க, தேவையான இடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.7) வடசென்னை அனல் மின் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு உட்பட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.