சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர்(NFPE) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (AIPEU) மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு (NFPE) ஆகியவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பதை கண்டித்து சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தின் முன்பு அஞ்சல் மூன்றின் உதவிச் செயளர் G.நாகலிங்கம் தலைமையில் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் (NFPE) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.