tamilnadu

img

வறட்சியால் பாதிக்கப்பட்ட 50 லட்சம் தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு

சிவகங்கை:
தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்படட 50 லட்சம் தென்னை  விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு தென்னை மர விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுக்கூட்டம் மாநிலத்துணைத்தலைவர் முத்துராமு  தலைமையில் திருப்புவனத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கொப்பரைத்தேங்காய் ஒரு கிலோவிற்கு 102 ரூபாய் வழங்க வேண்டும்.நீராபானம் தயாரிக்க தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.முழுத் தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.51 வழங்க வேண்டும்.கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 50 லட்சம் தென்னை மர விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.தென்னை விவசாயிகளுக்கு முழு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் வழங்க வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 30 அன்று சிவகங்கையில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

;