வேலூர், ஜூன் 24- விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்று சான்றிதழ் பெற்றால் தான், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்’ என்ற நடைமுறை, வேலூரில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்து அதிகம் நடப்பதில் இந்தியாவி லேயே, தமிழகம் முதன்மையாக உள்ளது. இதில், வேலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சாலை விபத்துக்களை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. வேலூர் சத்து வாச்சாரியில் உள்ள, வட்டார போக்குவரத்து அலுவல கத்துக்கு, ஓட்டுநர் உரிமம் பெற ஏராளமானோர் வரு கின்றனர். அவர்கள், 45 நிமிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்று, சான்றிதழ் பெற் றால் தான், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்ற, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் நடக்கும், வாகன விபத்துக் களை குறைக்க, ‘ஓட்டுனர் உரிமம்’ பெற வருவோருக்கு, 45 நிமிடம் விழிப்பு ணர்வு பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்றால் தான், ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். தமிழ்நாட்டி லேயே முதல் முறையாக, வேலூரில் தான், இது நடத் தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில், சாலை விதிகள், வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டியது குறித்து, வீடியோ படமும் காண்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.