tamilnadu

‘பூம்புகார் மாநில விருது’ பெற்ற கைவினை கலைஞருக்கு பாராட்டு

சிவகங்கை, மார்ச் 1- பூம்புகார் மாநில விருது பெற்ற சிவகங்கையைச் சேர்ந்த கைவினைக் கலைஞரை சிவகங்கை ஆட்சியர் ஜெ. ஜெய காந்தன் பாராட்டினார். தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது வழங்கப்படுகிறது. 2019- 2020 ஆம் ஆண்டு மர உட்பதிப்பு கைத்திறத் தொழிலில் சிறந்து விளங்கிய சிவ கங்கையைச் சேர்ந்த கே.பால்ராஜ் பூம்புகார் மாநில விரு துக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த பிப். 19-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மர உட்பதிப்பு கைத்திறத் தொழிலில் சிறந்து விளங்கிய கே.பால்ராஜூக்கு பூம்புகார் மாநில விருதை வழங்கினார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் மாநில விருது பெற்ற கே. பால்ராஜை, ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் பாராட்டினார். அப்போது, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற எஸ். கண்ணப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

;