tamilnadu

காட்டு நாயக்கன் சமூக மக்களின் சாலை ஆக்கிரமிப்பு: சிபிஎம் கண்டனம்

விழுப்புரம், நவ.20- விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர்  வட்டத் திற்குட்பட்ட நெச்சளூர் மதுரா ஆலம்புரவடை  கிரா மத்தில் காட்டு நாயக்கன் சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிரந்தரமாக வசித்து வரு கின்றனர். அம்மக்கள் மற்ற பகுதி களுக்குச் சென்று வர சரி யான சாலை வசதி இல்லா மல் காடு, கரம்புகள் மற்றும்  வயல் வழிகளை பயன்ப டுத்தி வந்தனர். இதனால் கடந்த 1986 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தனி யார் நிலங்களில் சுமார் 2  கிலோ மீட்டர் தூரம்  சாலை  அமைக்கப்பட்டு  பயன்ப டுத்தி வந்தனர். அந்த சாலை  நிலம் தனக்கு சொந்தமானது என்று ஆதிக்க பிரிவை சேர்ந்த வேடி என்பவர் சாலையை ஆக்ரமித்தும் சேதப்படுத்தியும் உள்ளார். இது குறித்து அந்த மக்கள் கடந்த 4 ஆம் தேதி  அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், வட்டாட்சியர் ஆகியோ ருக்கும் புகார் மனு கொடுத் துள்ளனர். ஆனால், எவ்வித  நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், அந்த மக்கள் நகரத்திற்கோ மற்ற பகுதிகளுக்கோ சென்று வர சாலை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேல்மலையனூர் வட்டச் செயலாளர் டி.முரு கன் தலைமையில்  நகரச்  செயலாளர் என்.கார்த்தி கேயன், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி வட்டச் செயலாளர்  ஆர்.அண்ணாமலை அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்க ளையும் மேலும், அந்த சாலை யையும் பார்வையிட்டனர். காட்டுநாயக்கன் சமூக மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்த சாலை ஆக்கிரமிப்பை அகற்றி புதிதாக சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.