சென்னை, மார்ச் 6- சிஏஏ போராட்டம் தொடர்பான வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திருப்பூரை மனதில் கொண்டே பிறப்பிக்கப்பட்டது எனac விளக்க மளித்துள்ள உயர்நீதிமன்றம், அந்த உத்தர வும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறி வித்துள்ளது. திருப்பூரில் சிஏஏ சட்டத்தை எதிர்த்து நடை பெறும் போராட்டத்தை தடுக்கக்கோரி வழக்க றிஞர் கோபிநாத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, அனுமதியில்லா மல் திருப்பூரில் குடியுரிமை திருத்தச் சட்டத் துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ போராட் டங்கள் நடைபெறவில்லை என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என்று வியாழனன்று(மார்ச் 5) உத்தரவிட்டனர்.
இந்நிலையில், அமைதியான முறையில் போராடிவரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதால், அதை திரும்பப் பெற வேண்டுமென மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர். வைகை, மோகன், முபீன், ராஜா முகமது உள்ளிட்டோர் முறை யீடு செய்தனர். உயர்நீதிமன்றம் வியாழனன்று(மார்ச் 5) பிறப்பித்த உத்தரவை வைத்து, மதுரையில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை மிரட்டும் வகையில் காவல்துறையினர் செயல்படுகின்றனர் என்றும், நோட்டீஸ் அளித்துள்ளனர் என்றும் அவர்கள் புகார் தெரிவித்தனர். அப்போது, தாங்கள் பிறப்பித்த உத்தரவு, திருப்பூர் சம்பந்தப் பட்டதுதான் என்றும், தமிழ கம் முழுவதுக்கும் பொருந்தும் வகையில் உத்தரவு வெளியிடவில்லை என்றும் நீதி பதிகள் தெரிவித்தனர். மேலும், திருப்பூர் போராட்டம் தொடர்பான வழக்கில் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் கூறி, வழக்கை 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைக்கலாம் என்றும் தெரிவித்தனர்.