சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், ஜீலை 30- கொரோனா காலத்தில் சாலைப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து சாலைப் பணியாளர்களுக்கும் தரமான பாதுகாப்பு உபகர ணங்களை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைப்ப ணியாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா நோய்த்தொற்று பரவிவரும் நிலையில் சாலைப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து சாலைப் பணியாளர்களுக்கும் தரமான முககவசம், கையுறை, கிருமி நாசினி திரவம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சா லைகளை தனியாரிடம் ஒப்படைக் கும் முடிவை திரும்பப் பெற வேண்டும். சாலைப் பணியா ளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியா ளர்கள் அனைவருக்கும், தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கும் உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைப்ப ணியாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட, ஓமலூர் உதவிகோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உட்கோட்ட துணைத்தலைவர் சி.செல்வன், உட்கோட்டச் செயலாளர் கே.எம்.வெங்கடேசன், கோட்ட தலைவர் ஆ.செல்வம், கோட்டச் செயலாளர் தா.கலைவாணன் அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கந்தசாமி, உட்கோட்ட செயலாளர் பாஸ்கர், வட்டச் செயலாளர் விவேகா னந்தன், மாவட்ட இணைச்செ யலாளர் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
திருப்பூரில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.