கோவையில் சிஜிஎச்எஸ் மருந்தக சேவை
கோவை, ஜூலை 11- மத்திய அரசு அதிகாரிகள் பயன்பெறும் சிஜி எச்எஸ் மருந்தக சேவைக்கான மையத்தை கோவை மற்றும் மதுரையில் விரைவில் துவக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அரசின் சுகா தாரத்துறையின் கீழ் செயல்படும் சிஜிஎச்எஸ் என்கிற மருந்தகம் மற்றும் மருத்துவர்கள் உள்ள டக்கிய மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய அரசு நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மருந்கத்தை பயன்ப டுத்தி வருகின்றனர். காப்பீட்டு திட்டத்தின் அடிப்ப டையில் மேற்கொள்ளப்படும் இச்சேவையா னது மாநில தலைநகரங்களை மையப்படுத் தியே உள்ளது. இதன்படி தமிழகத்தில் சென்னை யில் மட்டுமே இந்த மருந்தகம் உள்ளது. இதன்கா ரணமாக கோவை உள்ளிட்ட பிற மாவட்டத்தில் உள்ள பயனாளிகள் இச்சேவையின் முழு பயனைப் பெற முடியாமல் இருந்து வருகின்ற னர்.
இதனையடுத்து கோவையில் இந்த சிஜி எச்எஸ் மருந்தக சேவையை துவக்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் தொடர் முயற்சியை மேற் கொண்டு வந்தேன். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மத்திய சுகாதாரத்துறைக்கு கொங்கு மண்டலத்திற்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏழு எம்.பி.,க்கள் கையெழுத்திட்டு மனு அனுப்பி னோம். இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து மத்திய சுகாதாரத்துறை தற்போது கோவை மற்றும் மதுரையில் இந்த சிஜிஎச்எஸ் மருந்த கம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்துள்ளது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையி லும், இதர எம்.பி.,க்களின் சார்பிலும் வரவேற் கின்றேன். அதேநேரம், இந்த சிஜிஎச்எஸ் மருந்த கம் விரைவில் அமைத்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துவ தாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.