சிஐடியு அகில இந்திய மாநாடு 2020 ஜனவரி 23-27 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத்தை திங்களன்று மார்க்சிய அறிஞரும், முதுபெரும் தலைவருமான வே.மீனாட்சி சுந்தரம் திறந்து வைத்தார். மாநாட்டு இலச்சினையை மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட்டார். மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதி சிட்டிபாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.