tamilnadu

img

தலித் மக்களுக்கு தண்ணீர் வழங்க மறுக்கும் சாதி ஆதிக்க வெறியர்கள்

புகார் அளித்தும் கண்டுகொள்ளாத கரூர் மாவட்ட நிர்வாகம்

கரூர், ஆக.25- தலித் மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிப்பதற்கு தண்ணீர் வழங்க சாதி ஆதிக்க வெறியர்கள் மறுப்ப தை கரூர் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய கோ ரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே உள்ள கே.பி.தாழப்பட்டியில் தலித் வகு ப்பை சேர்ந்த 60 குடும்பத்தினர் வசித்து வரு கின்றோம். இந்நிலையில் இங்குள்ள 10 ஆயி ரம் லிட்டர், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அரசுக்கு சொந்தமான பொது மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் உள்ளது. இந்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொ ண்ட தண்ணீர் தொட்டியை சுமார் 300 குடும்ப த்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு குடிப்பதற்கு தண்ணீர் இன்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதே பகுதியிலுள்ள 10 ஆயி ரம் லிட்டர் மேல்நிலை தண்ணீர் தேக்க தொ ட்டியை 12 சாதி ஆதிக்க குடும்பங்கள் மட்டுமே  பயன்படுத்துகின்றன. தண்ணீர் பற்றாக்குறை யால் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் தண்ணீர்  பிடிக்க 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டிக்கு  சென்றால், சாதி ஆதிக்க வெறியர்கள் தண்ணீர் கொடுக்க மறுத்து விரட்டுகின்றனர்.  சாதி ஆதிக்கத்தைச் சேர்ந்த ராம மூர்த்தி, ராஜலிங்கம், கல்யாணசுந்தரம், ராம ச்சந்திரன், ஸ்டாலின், கண்ணன் ஆகியோர் தண்ணீர் கொடுக்க மறுப்பதுடன், இந்த நீர் தேக்க தொட்டியிலிருந்து தண்ணீரை விவ சாய நிலங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதுகுறித்து தாந்தோனிமலை ஒன்றியக்குழு தலைவர் சிவகாமி, பஞ்சாயத்து தலைவர் அபி ராமி ஆகியோரிடம் கோரிக்கை மனுக் கொடு த்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. கடந்த ஆக.16 அன்று மாவட்ட ஆட்சிய ரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதன் மீதும், இதுவரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்காமல் மாவட்ட நிர்வாகமும், அரசு  அலுவலர்களும் அலட்சியமாக செயல்படு கின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து  குடிநீர் கிடைத்திடவும், சாதி ஆதிக்கதினர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பொது நீர்த்தேக்கத் தொட்டியை அனைத்து சாதி மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு  செய்ய வேண்டும்.  மேலும் தலித் மக்க ளின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.