tamilnadu

img

மீண்டும் கம்பீரமாக எழுந்தார் அம்பேத்கர்

`வரலாறு படைத்த அம்பேத்கர் சிலை

25 ஆண்டுகளுக்கு முன்பு, மத்தியில் காங்கி ரஸ் ஆட்சியின் போது, மத்திய அமைச்சராக இருந்த அருணாச்சலம் வேதாரணியம் பேருந்து நிலை யத்தில் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வேதாரணீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடப்பதற்காக, அம்பேத்கர் சிலை யை அப்புறப்படுத்திட, மாவட்ட நிர்வாகமும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரும் பெரும் முயற்சி செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மற்ற அரசியல் கட்சிகள், தலித் இயக்கங்கள், ஊர்ப் பொதுமக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துப் பலமுறை மிகப் பெரும் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, அம்பேத்கர் சிலை அகற்றப்படாமல், அந்த இடத்தி லேயே தொடர்ந்து நின்ற அந்தக் கம்பீரக் காட்சி, வெகு நாளாக ஆர்எஸ்எஸ் - பாஜக மற்றும் அவர்களால் தூண்டிவிடப்பட்டு வரும் சாதி வெறியர்கள் கண்ணை உறுத்திக் கொண்டே இருந்துள்ளது. ஒரு சிறிய மோத லைத் தொடங்கி அதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலையைத் தகர்த்து விட்டனர். வேதாரணியத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப் பட்டதால், தமிழகமே கொதித்து எழுந்த நிலையில், காவல் துறையினர் இரவோடு இரவாக, சேலம் ஆத்தூரி லிருந்து புதிதாக அம்பேத்கர் சிலையக் கொண்டுவந்து திங்கட்கிழமைக் காலைக்குள் அதே இடத்திலேயே நிறுவி விட்டனர்.

வேதாரணியத்தை கலவர பூமியாக்கிய சாதிவெறி சக்திகளுக்கு கண்டனம்

நாகப்பட்டினம், ஆக.26- நாகை மாவட்டம், வேதாரணியத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஞாயிற்றுக்கிழமை மாலை வேதாரணியமே கலவர பூமியானது. காவல் நிலையம் முன்பு கார் எரிக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் முழு உருவச் சிலை உடைத்து, தகர்க்கப் பட்டது. வேதாரணியம் நகரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை அன்று கடைகள் அடைக்கப்பட்டன.

ஏன் இந்தக் கலவரம்?

ஏற்கனவே இப்பகுதியில் பிற்படுத்தப் பட்ட பிரிவைச் சேர்ந்த சிலருக்கும் பல்வேறு கட்சிகளில் உள்ள தலித் பிரிவினர் சிலருக்கும் பகைமையும் மோதலுமாகச் சிறு சிறு சம்ப வங்கள் நடைபெற்று வந்துள்ளன. இந்நிலையில், ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக் கிழமை மலை, 5.30 மணியளவில் பிற்படுத்தப் பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவரின் காரை பாண் டியன் என்பவர் ஓட்டி வந்து, வேதாரணி யம் பேருந்து நிலையம்- காவல் நிலையம் அருகே, தலித் பிரிவைச் சேர்ந்த ராமச்சந்தி ரன் என்பவர் மீது வேண்டுமென்றே மோதக் கலவரம் பற்றிக்கொண்டது. தலித் இளைஞர்கள் ஆத்திரத்தில் காரை எரிக்க, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஓர் இளைஞர் பேருந்து நிலையம் அருகே கம்பீரமாக நின்றிருந்த மாமேதை அண்ணல் அம்பேத்கர் சிலையின் பீடத்தின் மீது ஏறி, பெரிய வாளால் முதலில் அம்பேத்கர் தலை யை வெட்டி வீசி எறிந்தார். மற்றொருவர் சம்மட்டியால் அம்பேத்கரின் முழு உருவச் சிலையையும் பீடத்தோடு அடித்து நொறுக்கிச் சாய்த்தார். இத்தனைக்கும் வேதாரணியம் காவல் நிலையத்தில் இரு காவலர்களே இருந்தனர். அவர்கள் ஏதும் செய்யமுடியா மல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பரவிய கலவரம்

இந்தச் செய்தி காட்டுத் தீயாகப் பரவி, வேதாரணியம் முழுவதும் கலவர பூமியாக மாறியது. தலித்துகளின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழகத்தின் பல பகுதி களில் பதற்ற நிலை பரவியது. டாக்டர் அம் பேத்கர், தந்தை பெரியார் சிலைகளுக்குக் காவல் போடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு, காவல்துறை ஐ.ஜி.வரதராஜுலு மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீஸ் பட்டாளங்கள் வேதாரணியத்தில் குவிக்கப் பட்டன. அன்று இரவு இரு தரப்பினரைச் சேர்ந்த 51 பேர் கைது செய்யப்பட்டனர்.  மேலும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இரவோடு இரவாக அம்பேத்கரின் புதிய சிலையை அரசே நிறுவியது.

வேதாரணியத்தில்  சிபிஎம் தலைவர்கள்

இந்நிலையில், திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாள ரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், வி.தொ.ச. மாநிலப் பொதுச் செயலாளர் வி. அமிர்தலிங்கம், சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ். துரைராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ்சந்திர போஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் வாஞ்சிநாதன், சிபிஎம் வேதாரணியம் ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி, மாவட்டக்குழு உறுப்பினர் மா. முத்துராமலிங்கம், கோவை.சுப்பிரமணி யன், ஏ.வெற்றியழகன், பி.எஸ்.பன்னீர்செல் வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டப் பொருளாளர் பி.ஏ.ஜி.சந்திரசேக ரன், மாவட்ட நிர்வாகி வி.வி.ராஜா உள் ளிட்டோர் வேதாரணியம் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்தனர். கடை கள் மூடப்பட்டு, தடை உத்தரவு அமலில் இருப்பது போல், வேதாரணியம் காட்சி யளித்தது. மீண்டும் புதிதாக நிறுவப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் வி.மாரிமுத்து, நாகைமாலி, கே.சாமுவேல் ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

தலித் மக்களுடன் சந்திப்பு

பின்னர் சிபிஎம் தலைவர்கள், ராம கிருஷ்ணாபுரம் சென்று அங்கு பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்து விசாரித்தனர். முந்தைய இரவில் போலீசார் அராஜகமாகத் தாக்கிய சம்பவங்களை தலித் பெண்கள் ஒன்றுகூடிக் கண்ணீருடன் சிபிஎம் தலை வர்களிடம் தெரிவித்தனர். மாணவி எஸ்.வித்யா, ச.பட்டு, த.சாந்தா, ராஜலெட்சுமி, அஜிதா உள்ளிட்ட பெண்கள் பலர் போலீ சார் தாக்கிய காயங்களைக் காட்டினர். கல்லூரி- பள்ளியில் படிக்கும் எங்கள் பிள்ளை களைக் கைது செய்திருக்கின்றனர்; அவர் களை முதலில் விடுவிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அனைத்துக்கும் விரை வில் தீர்வு ஏற்படும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி என்றும் உங்களுக்குத் துணை நிற்கும், தைரியமாக இருங்கள் எனத் தலை வர்கள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
 

 -ந.காவியன்

 

தலித் மக்கள் மீது தாக்குதல், கைது

திங்கட்கிழமை இரவு, வேதாரணி யம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் 400 தலித் குடும்பத்தினரின் வீடுகளிலும் புகுந்து, போலீசார், பெண் களை இழிவாகப் பேசிக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். படிக்கும் மாணவர்கள் உட்பட தலித் ஆண்கள் பலர் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டனர். அந்தப் பகுதியில் தலித் ஆண்கள் யாருமே இல்லை. அவர்கள் எங்கே இருக்கி றார்கள் என்பதும் தெரியவில்லை.

வேதாரணியத்தில் மீண்டும் புதிதாக நிறுவப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ்,  சிபிஎம் தலைவர்கள் வி.மாரிமுத்து, நாகை மாலி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி முழக்கமிட்டனர்.

பாதிக்கப்பட்ட தலித் மக்களை சிபிஎம் தலைவர்கள் சந்தித்தனர்.