சிங்கப்பூர் சிட்டி
தென் கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ள குட்டி நாடான சிங்கப்பூரில் கொரோனா சீரான வேகத்தில் பரவி வருகிறது . அங்கு இதுவரை 2000-க்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ஊரடங்கு விதித்துள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டினருக்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அவர்களை நெருக்கமாக ஒரே இடத்தில் தங்க வைத்திருப்பதால் தான் இந்த நிலைமை எனச் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் ஜாவீத் அஷ்ரப் கூறியுள்ளார். இது குறித்து அவர் விரிவாகக் கூறியதாவது," சிங்கப்பூரில் உள்ள சுமார் 250 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்களில் நெருக்கமாகக் குடியிருப்பவர்கள். சிலர் நிரந்தரமாகச் சிங்கப்பூரில் குடியிருக்கும் இந்தியர்களும் உள்ளனர். கொரோனா பாதித்த இந்தியர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக இந்தியத் தூதர் ஜாவீத் அஷ்ரப் கூறியுள்ளார்.