tamilnadu

ஆட்சியர் கொடுத்த இடத்தில் வீடு கட்ட முடியமல் திருநங்கைகள் அவதி

2018ம் ஆண்டு சுததந்திர தின  விழாவில் திருநங்கை களுக்கு மாவட்ட ஆட்சியர்  கொடுத்த பட்டாவிற்கு இடம் கிடைக்காத தால் 2 வருடங்களாக திருங்கைகள் போராடி வருகின்றனர். மதுராந்தகம் வட்டம், புக்கத்துறை அடுத்த நடராஜபுரத்தில் 70க்கும் மேற் பட்ட திருங்கைகள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம்  கொடுத்த 15 வீடுகளில் பலர் கூட்டாக வசிக்கின்றனர். இந்நிலையில் தங்களுக்கு  குடிமனை கேட்டு 2016ம் ஆண்டு ஒருங்கி ணைந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரி டம் கோரினர். அதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், புத்திரன் கோட்டை கிராமத்தில் பட்டா நிலம் தேர்வு  செய்யப்பட்டது. 2018ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் 50 திருநங்கைகளுக்கு பட்டா வுடன் கூடிய நிலம் வழங்கப்பட்டது. ஆனால் அங்கு திருநங்கைகள் வீடுகட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தாக்கு தல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள் ளப்படாமல் உள்ளது, மாவட்ட ஆட்சியர் வழங்கிய பட்டா நிலத்தில் வீடு கட்ட முடி யாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரு நங்கைகள் அவதிப்படுகின்றனர்.

இப்பிரச்  சனையில் தற்போதைய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் முதல் திருநங்கை வழக்  கறிஞரான சத்தியஸ்ரீ சர்மிளா கூறுகையில், “அரசு வழங்கிய பட்டா இடத்தில் வீடு கட்ட  சென்ற எங்களை அப்பகுதி மக்கள் அடித்து  துரத்தி விட்டனர். எங்களுக்கு ஒதுக்கிய  இடத்தில் வீடுகட்ட அளந்து கொடுக்கும் படி இரண்டு ஆண்டுகளாக காஞ்சிபுரம் ஆட்சியரிடமும், தற்போதைய செங்கல் பட்டு ஆட்சியரிடமும் தொடர்ந்து முறை யிட்டு வருகிறோம். ஆனால் எந்த நட வடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் கொடுத்த பட்டா  இரண்டு ஆண்டுகளாக வெறும் காகித மாகவே உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்கு வாடகை கொடுக்க  முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உட னடியாக எங்களுக்கு ஒதுக்கிய இடத்தில் வீடுகட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? -க. பார்த்திபன்