ஒரு மணி நேரத்தில் தொண்டர் படைக்கு பதிவு செய்த 50 ஆயிரம் இளைஞர்கள்; சுறுசுறு சமூக சமையல் அறைகள்
திருவனந்தபுரம், மார்ச் 28- கேரள முதல்வர் அறிவித்த தொண்டர் படையும், சமூக சமையலறைகளும் அறிவிக்கப்பட்ட ஓரிரு மணி நேரத்தில் செயல்படத் தொடங்கி மக்க ளுக்கான மகத்தான சேவைகளுக்கான ‘கேரள முன்னுதாரணமாக’ சாதனை படைத்து வருகின்றன.
கொரோனா பாதிப்பை எதிர்கொண்டு வரும் மக்களுக்கான பல்வேறு நிவாரணத் திட்டங்களை வியாழனன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். அதில் அரசின் சேவைகளை மக்களி டம் கொண்டு செல்லவும், அவர்களது துயரங்களை துடைக்கவும் 2.3 லட்சம் இளைஞர்கள் கொண்ட தொண்டர் படை (சன்னத்த சேனா) யில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கென வெளியிட் டுள்ள வெப் போர்ட்டல் மூலம் அடுத்த ஒரு மணி நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்ததோடு கள மிறங்கினர். இதுபோல் இளைஞர் ஆணையம் வெளியிட்ட போர்ட்டரில் திரைத்துறை பிரபலங்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தன்னார்வ லர்களாக பதிவு செய்துள்ளனர்.
வெள்ளியன்று வீடு வீடாக சமூக நல ஓய்வூதி யங்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் கூட்டுறவு அமைப்புகள் வியாழனன்றே அந்த பணியை துவங்கின. முதல்வரின் அறி விப்புகள் வெளியாகும்போதே 47 உள்ளாட்சி அமைப்புகளில் சமூக சமையலறை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. வெள்ளியன்று மேலும் நூற்றுக்கணக்கான திருமண மண்டபங்கள், சமு தாய கூடங்கள் போன்ற இடங்களில் சமூக சமைய லறைகள் துவக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும்; பதுக்கல், அதிகவிலைக்கு பொருட்கள் விற்பனை யை தடுத்தும் அரசின் முயற்சிகளுக்கு தொண்டர் படை உதவி வருகிறது.
கோவிட் 19 தடுப்பு நடவடிக்கையில் கேரளத்தின் முயற்சிகளை பின்னர் மற்ற மாநிலங்களும் மத்திய அரசும் முன்மாதிரியாக கொண்டன என்பதே அனுபவம். வைரசின் சமூகப் பரவலை தடுக்க முழு முடக்கம் (லாக்டவுன்) முதல் சிறப்பு தொகுப்புத் திட்ட அறிவிப்பு வரை கேரளத்தின் செயல்கள் அதற்கான சாட்சியமாகும். கேரளத்தில் திங்களன்று (மார்ச் 23) லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகே அடுத்தநாள் நாடு முழுவதற்குமான லாக்டவுன் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டார். கடந்த வாரமே முதல்வர் பினராயி விஜயன் ரூ.20,000 கோடிக்கான பொருளாதார தொகுப்புத் திட்டங்களு டன் இலவச ரேசன் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளி யிட்டார். வியாழனன்றுதான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கொரோனா தொகுப்புத் திட்டம் அறிவித்தார். கொரோனா காலத்தில் ஒருவரும் பட்டினி கிடக்கமாட்டார்கள் என கேரள முதல்வர் தெரி வித்த பிறகே மத்திய அரசு இலவச ரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியது.
கேரளம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என்பது சுவாரஸ்யமானது. மத்திய அரசுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிப்பதற்கான ஹாட் லைனும் கேரள அரசால் துவக்கப்பட்டுள்ளது.