tamilnadu

img

சிஐடியு நடத்திய இலவச பயிற்சி வகுப்பில் 10 பேர் வெற்றி

டாஸ்மாக் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் தேர்வு

கோயம்புத்தூர், செப்.4- டாஸ்மாக் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் தேர்வில் சிஐடியு நடத்திய இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர். டாஸ்மாக் நிறுவனத்தில் காலமுறை ஊதியமின்றி மதுக்கடைகளில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். இவர்களை அரசு ஊழியர்க ளாக அங்கீகரித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள பணிடங்களை இவ்வூழியர்களை கொண்டே நிரப்ப வேண்டும் என சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் தொடர்ச்சி யான போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள  500 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டு தேர்விற்கான தேதியை யும் அறிவித்தது. இதனையடுத்து இந்த பணியிடங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் பணியில் அமர வேண்டும் என்பதற்காக சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் டாக்டர் அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையத்துடன் இணைந்து இரண்டு மாதங்கள் சிஐடியு கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்க கூட்டரங்கில் இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இந்நிலையில், இத்தேர்வின் முடிவுகள் செவ்வாயன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் கோவை மாவட்டத்தில் 19 நபர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இலவச பயிற்சி முகாமில் பயின்ற 10 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, ஜான்அந்தோனி ராஜ் ஆகியோர் கூறுகையில், எங்களின் பெரும் முயற்சிக்கு துணை நின்ற அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி முகாமிற்கு நன்றியும், தேர்வில் வெற்றி பெற்று பணியில் அமரும் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகள் தொடர்வதற்கு இந்த வெற்றி தங்களுக்கு உந்துசக்தியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.