tamilnadu

img

சத்தீஸ்கர்: 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சத்திஸ்கர் மாநிலத்தில் ராஜ்நந்த்கோவன் மாவட்டத்தில் சிட்டகோட்டா கிராமத்தின் காடுகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 7 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக  டெபுடி ஐஜி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். அவர்களிடம் 47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. என்று தெரிவித்துள்ளார். 

;