‘ஜூலை 9 வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!’
ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான- தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 9 அன்று அனைத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் நாடுதழுவிய மாபெரும் பொதுவேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைக் கோரி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை, அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள், சென்னையில் திங்களன்று நேரில் சந்தித்தனர்.