tamilnadu

img

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 22- கிராமப்புற இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு  வழங்க வேண்டும், என இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்டம், பெரி யநாயக்கன்பாளையம் ஒன் றிய 27 ஆவது மாநாடு, கே. ஆர்.தண்டபாணி தலைமை யில் ஞாயிறன்று நடை பெற்றது. தியாகிகளுடைய ஜோதி எடுத்துவரப்பட்டு, பேரணி மற்றும் கலை நிகழ்வுகளுடன் மாநாடு துவங்கியது. வெண்கொடியினை ஒன்றியச் செயலாளர் ந.ராஜா ஏற்றி வைத்தார். அட்டப் பாடி யூனியன் கவுன்சிலர் கே.கே.மேத்யூ,  ஏகேஎஸ் அமைப்பின் மாநில துணைத்தலை வர் லால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. மேட்டுப்பாளையம் -  கோவை நெடுஞ்சாலையிலுள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும். கிரா மப்புறங்களில் பேருந்து வசதிகளை மேம் படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஒன்றியத் தலைவராக கே.ஆர். தண்டபாணி, செயலாளராக ஏ.பிரகதீஸ்வ ரன், பொருளாளராக அனுஸ்ரீ உட்பட 14  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். இம்மாநாட்டில், வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் அர்ஜூன், துணைத் தலைவர் நிசார் அஹமத், மாவட்ட செயற் குழு உறுப்பினர் முத்துமுருகன், மாவட் டக்குழு உறுப்பினர் விக்னேஷ் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.