வடிகால் கோரிக்கை நிறைவேறாத நிலையில்,
களத்தில் இறங்கி தீர்வை ஏற்படுத்திக்கொண்ட பெண்கள்
குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் வசதி இல்லாத தால், அப்பகுதி பெண்கள் ஒன்றி ணைந்து “நமக்கு நாமே” திட்டத் தின் கீழ் ரூ.9 லட்சம் திரட்டி மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் செலவி னங்களுக்கு அரசு உதவ வேண் டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், குனியமுத் தூர் குறிஞ்சி நகர் பேஸ்-2 பகுதி யில் 60க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக இங்கு மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிப் பட்டு வந்தனர். இதுகுறித்து தொண் டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாந கராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தனர். இதுகுறித்து மாநகராட்சி மேயர் ரங்கநாயகி யிடம் மனு அளித்தனர். இதைய டுத்து மாநகராட்சி உதவி ஆணை யர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து “நமக்கு நாமே” திட் டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்தனர். இதைய டுத்து, அப்பகுதி பெண்கள் தலா ரூ.15,000 வீதம் 60 பேர் சேர்ந்து ரூ.9 லட்சம் திரட்டி மழைநீர் வடிகால் பணிகளை தொடங்கினர். 390 மீட் டர் தொலைவிற்கு கான்கிரீட் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. செலவினங்களை குறைக்க பெண்களே கட்டுமான பணிகளுக்கு உதவி செய்து வரு கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுக ளாக பல்வேறு இடங்களில் கோரிக்கை வைத்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்ததால், 100 சதவீத செலவினங்களை ஏற்று பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ரூ.9 லட்சம் இப்பணிகளுக்கு போதுமா னதாக இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து கூடுதல் செலவினங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்” என்றனர். தொண்டாமுத்தூர் தொகுதிக் குட்பட்ட குனியமுத்தூர் குறிஞ்சி நகர் பகுதியில் மழைநீர் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச் சருமான எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய் தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில், “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் பெண்கள் ஒன்றிணைந்து ரூ.9 லட்சம் திரட்டி பணிகளை மேற்கொண்டு வரு கின்றனர். கூடுதல் செலவினங்க ளுக்காக அரசின் உதவியை அவர் கள் எதிர்பார்த்து காத்திருக்கின் றனர்.