tamilnadu

img

மக்கள் விரோத அரசிடமிருந்து தேசம் காப்போம்..... வாலிபர் சங்கத்தினர் வாகன பிரச்சார இயக்கம்....

கோவை:
மகாத்மா காந்தி, நேதாஜியின் போராட்ட பாரம்பரியத்தில் உருவான தேசத்தை மக்கள் விரோத அரசிடமிருந்து பாதுகாப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து கோவை மாவட்டம் முழுவதும் ஞாயிறன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வாகன பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர்.கோவை காந்திபுரத்தில் துவங்கிய வாகன பிரச்சார இயக்கத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஸ்டாலின்குமார் தலைமை வகித்தார்.

வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாநிலக்குழுஉறுப்பினர் எஸ்.பாரதி, மாவட்டப் பொருளாளர் வி.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் துரைசங்கர், ஆர்.அர்ஜூன், எம்.அன்பரசன், எம்.விவேகானந்தன், நிசார், ந.ராஜா, வி.பாலகிருஷ்ணன், எம்.மணிபாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்டு, கோவை கிழக்கு, வடக்கு, பெரியநாயக்கன் பாளையம், எஸ்.எஸ்.குளம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
 

;