tamilnadu

ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

ஆனைமடுவு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

சேலம், ஏப்.18- வாழப்பாடி அருகே அமைந் துள்ள ஆனைமடுவு அணையிலி ருந்து பாசனத்திற்காக, வியாழ னன்று தண்ணீர் திறக்கப்பட்டுள் ளது. சேலம் மாவட்டம், வாழப்பா டியை அடுத்த அருநூற்றுமலை யில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி யின் குறுக்கே புழுதிக்குட்டை கிரா மத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. 67.25 அடி உயரத் தில் 267 மில்லியன் கனஅடி தண் ணீரை தேக்கும் வகையில் 263.86 ஏக் கர் பரப்பளவில் அணை கட்டப்பட் டுள்ளது. இந்த அணையால் நீர் முள்ளிக்குட்டை, குறிச்சி, கோலாத் துக்கோம்பை, சின்னம நாயக்கன் பாளையம், சந்தரபிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத் திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன. கடந்தாண்டு இறுதியில் அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த  பரவலான மழையால், அணையின்  நீர்மட்டம் 65.55 அடியாக உயர்ந்தது. கடந்த 3 மாதங்களாக இப்பகுதி யில் மழையில்லாததால் பாசனத் திற்கு தண்ணீர் திறந்துவிட வேண் டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை யேற்று அணையிலிருந்து ஏப்.17 காலை 8 மணிமுதல் தொடர்ந்து 12  நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 123 கனஅடி வீதம் ஆறு, ஏரிப்பாசன விவசாயிகள், ஆற்றுப்படுகை கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக வசிஷ்ட நதியில் தண்ணீா் திறக்க தமிழக அரசு புதனன்று அரசாணை  வெளியிட்டது. இதையடுத்து ஏப்.29 காலை 8 மணி முதல் தொடர்ந்து 20 நாட்களுக்கு வலது வாய்க்கா லில் விநாடிக்கு 35 கனஅடி வீதமும், இடது வாய்க்காலில் 15 கனஅடி வீதமும் மொத்தம் 50 கனஅடி புதிய ஆயக்கட்டு விவசாயிகளின் பாச னத்திற்காக, அணை பாசன வாய்க் கால்களில் தண்ணீர் திறக்கவும் தமி ழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அரசாணைப்படி வியா ழனன்று காலை புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து தலைமை மதகு வழியாக வசிஷ்ட நதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆற்றுப்படுகை கிராம  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

புதிய ஆயக்கட்டு விவசாயிகள் போராட்டம்

ஆனைமடுவு அணையிலிருந்து கூடுதலாக வசிஷ்ட நதியில் தண்ணீர் திறப்பதாக தகவல் கிடைத்ததால், அணை பகுதியில் திரண்ட புதிய ஆயக்கட்டு விவசாயிகள், தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அணை யில் இருந்து தண்ணீர் திறப்பதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள், வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி தலை மையிலான வருவாய்த்துறையினர், வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சம்பூரணம் தலைமையிலான போலீசார் விவ சாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமைதி பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து, காலை 8 மணிக்கு திறக்கவேண்டிய தண்ணீர், நண்பகல் 12 மணியளவில் திறக்கப்பட்டது.