வால்பாறை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறையை அடுத்த ஸ்டேன் மோர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் நேற்று மதியம் வழக்கம் போல் 25 மாணவர்கள் மதிய சத்துணவு சாப்பிட்டனர்.
உணவு சாப்பிட்ட சில மணி நேரத்தில், சில மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆசிரியர்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் 25 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.