மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்
கோவை, ஜூன் 8- நலவாரியத்திலுள்ள தொழிலா ளர்களின் 10,11,12 ஆகிய கல்வி ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க செய்ய வேண்டும், என கோவை மாநகர பொதுத்தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) வலியுறுத்தியுள்ளது. கோவை மாநகர பொது தொழி லாளர் சங்கம் (சிஐடியு) 11 ஆவது மாவட்ட மாநாடு, கோவை மில் தொழிலாளர் சங்க கட்டிடத்தில் எஸ்.ஆறுமுகம் நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. இம் மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் பி.நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செய லாளர் சி.சுப்பிரமணியம் வரவேற் றார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் ஜான் அந்தோணிராஜ் துவக்கவு ரையாற்றினார். மாவட்டச் செய லாளர் டி.வி.ரமணி, பொருளாளர் பி.ஈஸ்வரன் அறிக்கைகளை முன் வைத்தனர். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஏழுமலை, தமுஎகச மூத்த தோழர் திருமூர்த்தி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், நலவாரியத் திலுள்ள தொழிலாளர்களின் 10, 11, 12 ஆகிய கல்வி ஆண்டு மாணவர்க ளுக்கும் கல்வி உதவித்தொகை கிடைக்க செய்ய வேண்டும். கட்டு மானத் தொழிலாளர்களின் குழந் தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை போலவே மீத முள்ள 17 வாரியங்களுக்கும் உத வித்தொகை வழங்க வேண்டும். அனைத்து வாரியங்களுக்கும் தனித்துவமான நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும். ஆன்லைன் உதவித்தொகைகளுக்கு பதிவு செய்யும்போது சங்கத்தின் அங்கீ காரத்துடன் பதிவு செய்யும் நடை முறை அமல்படுத்த வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டத் தலைவராக டி.வி.ரமணி, செயலாளராக பி.நவநீத கிருஷ்ணன், பொருளாளராக பி. ஈஸ்வரன் உள்ளிட்ட 19 பேர் நிர் வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட னர். சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நிறை வுரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் நன்றி கூறினார். முன்னதாக, கோவை யில் நடைபெற்றயுள்ள சிஐடியு மாநில மாநாட்டிற்கு ரூ.25 ஆயிரம் முதல் தவணையாக வழங்கப்பட் டது.