tamilnadu

img

படுகொலை செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அஞ்சலி

படுகொலை செய்யப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அஞ்சலி

தருமபுரி, ஏப்.25- பஹல்காமில் படுகொலை செய் யப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குத லில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது நாட்டையே அதிர்ச்சிக்கு உள் ளாக்கியுள்ளது. இந்த பயங்கரவா தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் வகையில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வியாழனன்று மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி, இரங்கல் கூட்டம்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் சோ.அருச்சுனன், ஆர்.மல் லிகா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச் சந்திரன், கே.பூபதி, எம்.அருள் குமார், மாதர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.ஜெயா, நிர்வாகிகள் எம்.மீனாட்சி, ரங்கநாயகி, தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர்.சிங்கார வேலு உட்பட பலர் பங்கேற்று, மெழு குவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி னர். இதேபோன்று, அரூர் பேருந்து நிலையம் அருகே வெள்ளியன்று அஞ் சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், தமுஎகச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா,  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி. குமார், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஏ.நேரு, கே.என்.ஏழுமலை, ஜடை யாண்டி, இ.கே.முருகன், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், மேச்சேரி யில் வெள்ளியன்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.மணிமுத்து  தலைமை வகித்தார். இதில் விவ சாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று,  பனமரத்துப்பட்டி, சந்தைப்பேட்டை  பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், கட் சியின் மாநிலக்குழு உறுப்பினர் அ. குமார், ஒன்றியச் செயலாளர் செவந் தியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.