மின் உற்பத்தி, குடிநீர் விநியோகத்தில் சிக்கல் இருக்காது!
நீலகிரி அணைகளில் 85% நீர் இருப்பு:
உதகை, ஜூன் 16 – நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் 85 சதவீதம் தண் ணீர் இருப்பு உள்ளதால், மின் உற் பத்தியிலும், கூட்டு குடிநீர் திட்டத் திற்கான குடிநீர் விநியோகத்திலும் எந்த சிக்கலும் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். நடப்பாண்டில் ஏப்ரல் மாத நில வரப்படி நீலகிரி அணைகளில் 30 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால், கடந்த மாதத் தில் பெய்த கன மழையாலும், ஜூன் 14, 15 ஆம் தேதிகளில் விடுக்கப் பட்ட ரெட் அலர்ட்டை தொடர்ந் தும், ஜூன் 16 ஆம் தேதி விடுக்கப் பட்ட ஆரஞ்சு அலர்ட்டை தொடர்ந் தும் கடந்த மூன்று நாட்களாக பெய்த பலத்த மழையாலும் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதிகளில் பலத்த காற்று டன் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக் காரா, பார்சன்ஸ் வேலி உள்ளிட்ட இடங்களில் அதிகபட்ச மழை பதி வாகியுள்ளது. கடந்த ஒரு மாதத் தில் அவலாஞ்சியில் 150 செ.மீ., அப் பர் பவானியில் 100 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் மழை யால் மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் வினாடிக்கு 200 முதல் 300 கன அடி வரை தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. திங்களன்று காலை நிலவரப் படி அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா, குந்தா, கெத்தை, பார் சன்ஸ்வேலி உள்ளிட்ட பெரும் பாலான அணைகளில் 85 சதவீத தண்ணீர் இருப்பு உள்ளது. குந்தா அணை முழு கொள்ளளவை எட்டி யுள்ளதால், அதை திறக்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. மின் உற்பத்தி அதிகரிப்பு: மாவட்டத்தில் பரவலாக மழைப்பொழிவு இருப்பதால், மின் உற்பத்திக்கு பயன்படும் பெரும் பாலான அணைகளில் மின் உற் பத்திக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது. இரண்டு மின் வட் டங்களில் உள்ள 32 பிரிவுகளில், 28 பிரிவுகளில் தடையின்றி மின் உற் பத்தி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. 833.65 மெகாவாட் திறன் கொண்ட 12 மின் நிலையங்களில், 600 மெகாவாட் அளவுக்கு மின் உற் பத்தி அதிகரித்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதி காரிகள் கூறுகையில், “நடப்பாண் டில் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே பெய்தது. சில நாட்கள் மழை தொடர்ந்ததை அடுத்து அணைகளில் 85 சதவீதம் தண் ணீர் இருப்பு உள்ளது. நடப்பாண்டு இறுதி வரை மின் உற்பத்தி தடை யின்றி மேற்கொள்ள முடியும்” என் றனர்.