கோவை , ஏப்.25- கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கபட்டு உள்ளது.தமிழகத்தில் அத்தியாவசிய தேவைகளை தாண்டி வெளியே சுற்றி திரிபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகர காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் மூன்று பேர் போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர்கள். இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதின் காரணமாக அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் தற்காலிகமாக போத்தனூர் காவல் நிலையம் வேறு இடத்தில் சிலநாட்களுக்கு இயங்கும் என மாநகர காவல் ஆணையர் அறிவிருத்தியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் 6 பேரில் ஒருவர் குனியமுத்தூர் காவல்நிலையம், ஒருவர் ஆயுதப்படை, ஒருவர் போக்குவரத்து புலனாய்வு மற்றவர்கள் போத்தனூர் காவல்நிலையத்தை சேர்ந்தவர்களாவர்கள். இந்நிலையில் குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தையும் தற்காலிகமாக மூட மாநகர காவல் துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. அதே நேரம் , அந்த காவல் நிலையம் குனியமுத்தூர் குமரன் மஹாலில் தற்காலிகமாக செயல்படுகின்றது.நேற்று போத்தனூர் காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில் இன்று குனியமுத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.