சொந்த ஊரில் விலை போகாத ஆடு
சொந்த ஊரில் விலை போகாத ஆடு, வெளியூரில் விலை போகும் என நினைத்து சப தம் எடுக்கிறது. அந்த ஆட்டின் சபதம் வாழ் ்நாள் முழுவதும் விலை போகாது என அண்ணாமலையை பெயரைச் சொல்லா மல் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித் தார். கோவை மாவட்டம், சின்னியம்பாளை யத்தில், “பெரியார் எனும் பெரு நெருப்பு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சனியன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர் களாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், சூலூர் பாவேந்தர் பேரவை தலைவர் புலவர் செந்தலைகவு தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசு கையில், பெரியார் குறித்த உரையாடலை, நமது கோவை மாவட்டத்தில் 10 தொகுதி களிலும் தனித்தனியாக நடத்திட வேண்டும், அடுத்த தலைமுறையை உருவாக்க அடித் தளத்தை அமைத்திட வேண்டும். பெரியார் எனும் பெரு நெருப்பை முன்னெடுக்கும் பய ணத்தில், சிறு துரும்பாக நாங்களும் இணைந்து பயணிக்க இருக்கின்றோம். இது போன்ற கருத்துகளை அரங்கில் இருப்பவர் கள் மட்டும் கேட்டால், அது சுயநலம் இதை அனைவரும் கேட்கும் விதமாக மிக விரை வில் கோவையில் மாநாட்டினை போல பெரிய கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்து வோம். சில பேர் (பா.ஜ.க) சில நேரங்களில் தொலைக்காட்சிகளில் பேட்டி மட்டும் கொடுத்துவிட்டு, கோவை ஏதோ சிலருக்கு சொந்தம் என்பது போல காட்ட முயல்கின்ற னர். அப்படியில்லை கோவை என்றும் பெரி யார் மண், திராவிட மண் என்பதை கோவை மாவட்ட மக்கள் நிரூபித்து காட்டியிருக்கின்றனர். ஏதோ கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு வெற்றி பெற்று விட்டதால், அதுவும் சட்ட மன்ற தேர்தலில் சொந்த ஊரில் விலை போகாத ஆடு, வெளியூரில் நாடாளுமன்ற நேரத்தில் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து வந்த போது எங்க ஊரும் பெரி யார் மண் தான் தமிழகத்தில் எங்கேயும் வேலை இல்லை என உணர்த்தியனுப்பி இருக்கின்றோம். மெத்த படித்த உலகிலேயே நான் தான் பெரிய அறிவாளி என நினைத்து கொண்டு, தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டு, செருப்பு போட மாட் டேன் என புது கதையை சொல்லும் தம்பிக்கு நான் இப்ப சொல்கின்றேன், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் தமிழ்நாடு முதல்வர் தளபதியின் ஆட்சியில் வாழ் நாள் முழுக்க அவர் செருப்பே போட முடி யாது. கொஞ்சம் யோசித்து சபதத்தை எடுக்க வேண்டும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை பெயரை சொல்லாமல் விமர்சித்தார். சிலபேருக்கு சில நேரங்களில் சிந்தனை வரும், ரஜினி படத்தில் ஒரு பாட்டில் பணக் காரராகி விடுவார் அது போல, அரசி யலுக்கு வந்தால் இரண்டு வருடத்தில் முதல் வர் பதவிக்கு வந்துவிடலாம் என சிலர் நினைக்கின்றனர். பெரியார் மண்ணில் வந்து வாக்கு சேகரிக்கும் போது பெரியாரை இழிவு படுத்தி பேசினால் தேச தியாகிவிடலாம் என சிலர் நினைக்கின்றனர். ஒரு நொடி போதும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு, ஆனால், உங்கள் கருத்தை உங்கள் வீட்டில் பணி யாற்றும் பணியாளர்கூட கேட்க மாட்டார், என் றார்.