tamilnadu

img

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது – மு.க.ஸ்டாலின்  

கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 17 வயது மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தனியார் பள்ளியின் ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருவதையடுத்து பள்ளியின் முதல்வர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கோவை மாணவியின் மரணம் மனதை வருந்தச் செய்துள்ளது. சில மனித மிருகங்களின் வக்கிரமும் வன்மமும் ஒரு உயிரைப் பறித்துள்ளது. பாலியல் வன்செயல்கள் நடக்காமல் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்; பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

;