tamilnadu

img

மணல் கடத்தலை தடுக்கக் கோரி போராட்டம்

திருவண்ணாமலை, ஜூலை 6- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்  பாக்கம் செய்யாற்றுப் படுகையில் தொடர்ந்து நடைபெறும் மணல் கடத்தலை  தடுக்க வேண்டும். அதில் தொடர்புடைய வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 6)  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் கே.கே.வெங்கடே சன் தலைமை தாங்கினார். காவலூர்  ஊராட்சி மன்றத் தலைவர் கே.ஜெயகொடி  குமார், ஆனைவாடி ஊராட்சி மன்றத் தலை வர் பி.செல்வி பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலா ளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பி னர்கள் எம்.வீரபத்திரன் பி.செல்வம், டி.கே. வெங்கடேசன், எஸ்.ராமதாஸ், எம்.பிரகல நாதன், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.சுப்பிர மணி, பி.சுந்தர், எஸ்.குமரன், கமலக் கண்ணன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  பேசினர்.

தலைவர்கள் பேசுகையில், கலசப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதி  கிராம மக்கள், விவசாயம் மற்றும் கால்நடை  வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்  டுள்ளனர். கிராம மக்களின் குடிநீர் தேவையை போக்க செய்யாற்று படுகை யில் ஆழ்துளை கிணறு  அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த நீராதாரத்தை சிதைக்கும் வகை யில் பல ஆண்டுகளாக செய்யாற்று படுகை யில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. மணல் கொள்ளையைத் தடுக்க காவல்துறை, வருவாய்துறை, பொதுப் பணித்துறை, கனிமவளத்துறை என பல்வேறு துறைகள் இருந்தும், எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை யினரின் துணையோடு மணல் கொள்ளை  நடப்பதாகவும், வருவாய் துறை அதிகாரி களும் கண்டுகொள்தில்லை எனவும் குற்றம்  சாட்டினர். பொதுமக்கள், ஊராட்சி மன்றத் தலை வர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இந்த மணல் கடத்தல்  குறித்து புகார் அளித்தும் உறுதியான நடவ டிக்கை ஏதும் இல்லை.  கலசப்பாக்கம், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம், ஆனைவாடி, காலூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுகிறது.

மேலும், மணல் கொள்ளையர்களால் காலூர் ஊராட்சி மன்றத் தலைவர் கணவர்  மற்றும் ஆனைவாடி ஊராட்சி மன்ற தலைவ ரின் கணவர் ஆகியோர் தாக்கப்பட்டுள்ள னர். ஊராட்சி மன்றத் தலைவர்களை தாக்கிய  உண்மையான குற்றவாளிகள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல்  கடத்தலை தட்டிக் கேட்கும் ஊராட்சிமன்றத்  தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மணல்  கடத்தல்காரர்களுக்கு துணைபோகும் வரு வாய்த்துறை மற்றும் காவல்துறையை கண்  டிப்பதுடன், அவர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். முன்னதாக வட்டாட்சியர் ராஜேஸ்வரியிடம் மனு அளித்தனர்.