tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிறுவாணி அணை நீர்மட்டம் 34.80 அடியாக உயர்வு

கோவை, மே 29- கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையின் நீர்மட்டம், கனமழை காரண மாக 34.80 அடியாக உயர்ந்துள்ளது. சிறுவாணி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உரு வாகி, வடக்கு நோக்கி பாய்ந்து பவானி ஆற்றில் கலக்கிறது. இதன் நீர் முத்திக்குளம் அருவி உள்ளிட்ட 37 ஓடைகளிலி ருந்து பெறப்படுகிறது. இது கோவை மாநகராட்சியின் 22  வார்டுகள் மற்றும் வழியோர 22 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குகிறது. அணையின் அடிவாரத்தில் 59 மி.மீ. மற்றும்  அணைகட்டு பகுதியில் 63 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகி யுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.61 அடியாக இருக்க,  தற்போது 34.80 அடி நீர்மட்டம் உள்ளது. கோவை மாவட்ட  மக்களின் குடிநீர் தேவைக்காக, தினசரி 101.40 எம்.எல்.டி.க்கு  பதிலாக 78.53 எம்.எல்.டி. தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து பெய்யும் கனமழையால் அணை விரைவில் நிரம் பும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உடுமலை புதிய பேருந்து நிலையம் திறப்பு

உடுமலை, மே 29- பல ஆண்டுகள் திறக்கப்படாமல் இருந்த உடுமலை புதிய  பேருந்து நிலைய கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்காக வியாழ னன்று திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை மத்திய பேருந்து நிலை யத்தை விரிவாக்கம் செய்யும் விதமாக, கடந்த ஐந்து ஆண்டு களுக்கு முன்பு ரூ.3.75 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய  கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டது. பல ஆண்டுகளாக கட் டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வேலைகள்  முடிக்கப்பட்டு பல மாதங்கள் திறப்பு விழாவிற்கு காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்நிலையில், வியாழ னன்று புதிதாகக் கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலைய  கட்டிடத்தை, சென்னையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். உடுமலை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடளு மன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, உடுமலை நகர்மன்றத் தலை வர் மத்தீன், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ஜெயராமகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சரவணக் குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாதி ஒழிப்பாளர் சங்கமம் – வரவேற்புக்குழு அமைப்பு

ஈரோடு, மே 28- ஜூலை 27 இல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் சாதி ஒழிப்பாளர் சங்கமம் நடத்துவதற்கான வரவேற்புக் குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஜூலை 27 இல்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சாதி ஒழிப்பா ளர் சங்கமம் நடத்துவதற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட் டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, பெருந் துறை தாலுகா தலைவர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, மாவட்டத் துணைச்  செயலாளர் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்ற னர்.  இதில், 61 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட் டது. வரவேற்புக்குழு தலைவராக கே.குப்புசாமி, செயலாள ராக சி.பழனிசாமி, பொருளாளராக கோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்கத் தேர்தல்: நட்பு அணி வேட்பாளர் பட்டியல்  அறிவிப்பு

கோவை, மே 29 – தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தமிழ்நாடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்கத் தின் நிர்வாகிகள் தேர்தல் மே 31 ஆம்தேதி ஆன்லைன்  மூலம் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், பேரூராட்சி அலுவ லர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், ‘நட்பு அணி’  சார்பில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களின்  வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நட்பு அணியின் முக்கிய வேட்பாளர்களாக, மாநிலத் தலைவர் பதவிக்கு கா. காலசாமி, மாநில பொதுச்  செயலாளர் பதவிக்கு கோ. தங்கவேல், மற்றும் மாநில பொரு ளாளர் பதவிக்கு உ. மீரா மைதீன் ஆகியோர் போட்டியிடு கின்றனர். இந்த அணி தங்களின் வாக்குறுதிகளாக, குறைந்துள்ள  பேரூராட்சிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, பதவி உயர்வு தேக்கத்தைப் போக்க புதிய பேரூராட்சிகள் உரு வாக்கப்படும். செயல் அலுவலர்களுக்கு கலந்தாய்வு அடிப் படையில் பணியிட மாறுதல் மற்றும் பெண் அலுவலர்க ளுக்கு மாவட்ட முன்னுரிமை வழங்கப்படும். நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட காலத் தில் இறுதி ஆணை பிறப்பிக்கப்படும். பணி ஓய்வு நாளில்  தற்காலிக நீக்கம் தவிர்க்கப்படும். 1998-2001 இல் நிய மிக்கப்பட்ட 2,923 பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட் டம் மீட்கப்படும். குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரப் பணி யிடங்கள் நிரந்தரமாக்கப்படும்; இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் பணியிடங்கள் மீண்டும் உருவாக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் நட்பு அணியின் சார்பில் வைக் கப்பட்டுள்ளது. இந்த  வாக்குறுதிகள் அணைத்தும் களத்தில் பணியாற் றும் செயல் அலுவலர்களின் மனக்குமுறல்கள் என்றும், நடை முறை எதார்த்தத்தில் செயல்படுத்தக்கூடியது என்பதால் செயல் அலுவலர்கள் மத்தியில் பேசுபொருளாக உள்ளது. தேர்தல் முடிவு மே 31 ஆம்தேதியே வெளியிடப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரிக்கை

நாமக்கல், மே 29- திருச்செங்கோடு அருகே உள்ள ஆயித் தாகுட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் கிராமம், ஆயித்தாகுட்டை குடித்தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து  வருகின்றனர். இப்பகுதியில், மேற்குப் பகுதி யில் குடியிருக்கும் மக்களுக்கு சாக்கடை  கால்வாய் இல்லாததால், கழிவுநீர் குட்டை  போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று எலச் சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகமணிகண்டனிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட அவர், உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதி யளித்தார். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், முன்னாள் வார்டு உறுப்பினர் பி.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு

நாமக்கல், மே 29- நாமக்கல்லில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி யது. இதனால் பல இடங்களில் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள் களாக நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புத னன்று பிற்பகல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த மழையால் நாமக்கல்லில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நாமக்கல் - சேலம்  சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை,  திருச்செங்கோடு சாலை உள்ளிட்ட பகுதிக ளில் மழைநீா் ஆறு போல ஓடியது. இதனால்  பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது. வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்தபடி  சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை யில் வாகனங்களை இயக்க முடியாத அள வுக்கு தண்ணீர் தேங்கி நின்றன. சேலம் சாலை யில் கழிவுநீர் வெளியேறி, மழைநீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல் லூரி வானிலை ஆலோசனை மையம்  வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை யில், நாமக்கல் மாவட்டத்தில், கடந்த  வாரம் சில இடங்களில் மழை பதிவாகி யுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப் படும். பல இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. வெப்ப நிலை பக லில் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு நேர  வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்ப டும். காற்று மணிக்கு 12 கி.மீ வேகத் தில் தென்மேற்கு திசையில் இருந்து  வீசக்கூடும். இன்னும் இரு மாதங்களுக்கு  அதிக காற்றின் வேகம் கொண்ட வானி லையே நிலவும், என தெரிவிக்கப்பட்டுள் ளது.