tamilnadu

img

ஆராய்ச்சி மாணவரை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய சங்கி பேராசிரியர்

கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் மதன் சங்கர் என்பவர் தன்னிடம் பயிலும் மாணவர்களை பாலியல் உறவிற்கு கட்டாயப்படுத்துவதாகவும் மறுத்தால் படிப்பை முடிக்கவிடாமல் இழுத்தடிப்பதாகவும் பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது.  
ஆர்எஸ்எஸ் அமைப்பின் உட்பிரிவான சிக்க்ஷா சன்ஸ்க்ருதி உத்தான் ந்யாஸ் என்கிற அமைப்பின் சுற்றுசூழல் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருபவர்  எஸ்ஆர். மதன் சங்கர் . பாஜகவிற்கு தீவிரமாக பணியாற்றி வருபவர். மாணவர்களிடம் தொடர்ந்து இந்துத்துவா கருத்துக்களை  பரப்புவதில் முதன்மையானவர்.  இந்துத்துவா அமைப்புகள் முன்னெடுக்கும் நிகழ்ச்சிகளான நவராத்திரி, மாகசிவராத்திரி, ஆடிப்பெருக்கு, தைபூசம், மகாபூர்ணிமா, வரலட்சுமி விரதம், கருடபஞ்சமி, விஷ்வஅத்தமி போன்ற விழாக்களை கல்லூரியில் முன்னெடுத்து வருபவர். தங்களது அழைப்பிதழில் கூட திருவள்ளுவருக்கு காவி உடை போடாவிட்டால் கோபம் வருமாம். அந்தளவிற்கு தீவிர ஆர்எஸ்எஸ் வெறியர். 
  இவர் கொங்குநாடு கலை,அறிவியல் கல்லூரியின்  உயிரி தொழில்நுட்பத்துறையின் துறைத்தலைவராகவும், கல்லூரியின் டீன் ஆகவும் இருந்து வருகிறார். இவர்  தன்னிடம் பயிலும்  மாணவர்களையும், தான் வழிகாட்டும் ஆய்வு மாணவர்களையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி வந்திருக்கிறார்.  பல மாணவர்கள் தங்களின் கல்வி பாதிக்கப்படும் என்கிற பயத்தில்  பலரும் வெளியில் சொல்லாமல் அப்படியே சென்று விடுவதும், பலர்  மதன் சங்கரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தியும் சென்றிருக்கின்றனர். 
இந்நிலையில்  வழக்கம் போல் உயிரி தொழில்நுட்ப பிரிவில் கடந்த 1.5 வருடமாக ஆய்வு செய்து வரும் மாணவர் ஒருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவர் கூறியதாவது:  என்னை ஒரு வருடத்திற்கும் மேலாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். தன்னுடன் பாலியல் உறவு  வைத்துக்கொள்ளாவிட்டால் பட்டத்தை முடிக்க விடாமல் செய்துவிடுவதாக மிரட்டினார். மேலும் என்னை மதரீதியாக இழிவு படுத்தி பேசினார். பல மாணவர்களை  சாதி ரீதியாகவும் இழிவு படுத்தி பேசுவார்.
 இது பற்றி நான் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், நிர்வாகம் மதன் சங்கருக்கு ஆதரவாகவே இருந்தது. அதன்பின்னர் நான்  பாரதியார் பல்கலைகழகத்திடம்  புகாரளித்தேன். இந்நிலையில் ஐ.சி.சி கமிட்டி( உள் புகார் குழு )  அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து  மதன் சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
ஆனால் என்னை பாலியல் தொந்தரவு செய்து துன்புறுத்தியது குறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. கல்லூரி நிர்வாகம் ஆய்வு படிப்பை தொடருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் என்னால் படிப்பை தொடர முடியவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார்.
இது குறித்து பேராசிரியர் மதன் சங்கரை தொடர்பு கொண்ட போது..  அந்த புகார் பொய், அது குறித்து பேசத்தான் சென்று கொண்டிருக்கிறேன்.. என்று முடித்துக் கொண்டார். 
இந்நிலையில் பல்வேறு மாணவர்கள் மதன் சங்கரின் பாலியல் தொந்தரவு குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நிர்வாகம் அப்படி வரும் மாணவர்களை மிரட்டி அனுப்புவதாகவும் கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
.    
 

;