தார் சாலை அமைக்க கோரிக்கை
தருமபுரி, ஜூன் 9 - குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீர மைத்து தரக்கோரி வெள்ளோளை ஊராட்சி மக்கள் திங்களன்று தருமபுரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்திருப்பதாவது, தருமபுரி ஒன் றியத்தில் வெள்ளோளை ஊராட்சி உள்ளது. வெள் ளோளை ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அத்திமா நகர் வரை மண் சாலையாக உள்ளது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையால் இருசக்கரவாகணங்க ளில் செல்வோர் மிகுந்த சிரமமடைகின்றனர். தார் சாலை அமைத்து தர வேண்டும் என தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே வெளளோளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து அத்திமா நகர் வரை தார்சாலை அமைத்து தர வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனர்.
விபத்து - இருவர் பலி நாமக்கல்
, ஜூன் 9 – பரமத்தி அருகே சாலையோரத்தில் நின்று கொண் டிருந்த பொலிரோ வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரி ழந்தனர், 6 பேர் படுகாயமடைந்தனர். மதுரையில் இருந்து நாமக்கல் வழியாக குஜராத் நோக்கி சென்ற பொலிரோ ஜீப்பில் 4 ஆண்கள், 2 பெண் கள், 2 குழந்தைகள் என ஒரே வாகனத்தில் 8 பேர் ஞாயி றன்று பயணம் செய்துள்ளனர். நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி அருகே பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே உள்ள சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தி அனைவரும் சாப்பிட்டுள்ளனர். கொச்சியில் இருந்து கண் டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் நோக்கி வந்து கொண்டி ருந்தது, அப்போது சாலையோரத்தில் நின்று கொண்டி ருந்த பொலிரோ ஜீப் மீது மோதியதில், இதில் பொலிரோ ஜீப் சுக்கு நூறாக நொறுங்கியது மேலும் அருகே உள்ள பள்ளத்தில் ஜீப், கண்டெய்னர் லாரியும் உருண்டது., இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆண், பெண் என இருவர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 நபர்களை மீட்டு சிகிச் சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் ஜீப்பின் இடிப்பாட்டுக்குள் சிக்கி கொண்டு ஆபத்தான நிலை யில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது, இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் கிரைன் மூலம் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாமக்கல், ஜூன் 9 – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில், திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத் தில், ரூ.3.28 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி களை ஆட்சியர் மருத்துவர் ச.உமா வழங்கினார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத் தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வச திகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத் தம் 421 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். மனுக்களை பெற்ற ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, தாட்கோ மூலம் 11 பயனா ளிகளுக்கு ரூ.28,500/- மதிப்பில் கல்வி மற்றும் திருமண உதவித்தொகையினையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.3.00 இலட்சம் மதிப்பில் கறவை மாடு வாங்குவதற்கு கடனுதவியும்என 14 பய னாளிகளுக்கு ரூ.3.28 இலட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் ம.கிருஷ்ணவேனி உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
வேளாண் கண்காட்சி ஆட்சியர் தகவல்
நாமக்கல், ஜூன் 9 – ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் 11, 12 தேதிகளில் ”வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங் கம்” நடைபெறவுள்ளது, இதனை விவசாயிகள் பயன்ப டுத்திக்கொள்ள வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் மருத்துவர்.ச.உமா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாநில அளவிலான ”வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்” ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் வருகின்ற 11.06.2025 மற் றும் 12.06.2025 ஆகிய நாட்களில் தமிழக முதல மைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். மேற்கண்ட, கண் காட்சியில் வேளாண்மைத்துறை மற்றும் சகோதர துறை கள் சார்ந்த அனைத்து புதிய தொழில்நுட்பங்களும் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள் ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டா ரங்களிலிருந்தும் விவசாயிகளை கண்காட்சிக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட் டாரங்களிலும் உள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு மேற்கண்ட மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.