பாஜக அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பலிவாங்கும் எதேச்சதிகார போக்கைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கோவையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதை கண்டித்தும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை பாஜக அரசு எதிர்க்கட்சிகளைப் பலி வாங்குவதற்காக பயன்படுத்துகிறது, வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தியா முழுமைக்கும் பாஜகவுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அச்சேர்க்கைக்கான நாளை சீர்குழைக்க பல நடவடிக்கைகளை பஜக அரசு எடுக்கிறது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.