சோலார் மின் உற்பத்தி கம்பம் அமைக்க எதிர்ப்பு! கண்ணில் கருப்புத்துணி கட்டி பொதுமக்கள் மறியல்
மக்கல், மே 31- வெப்படை அருகே, தனியார் நிறுவனத்தின் சார்பில் சோலார் மின் உற்பத்தி கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி சாலை மறியலில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், வெப் படை அருகே உள்ள பாதரை என் னும் பகுதியில், தனியார் நிறுவனத் தின் சார்பில் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதற்காக எலந்த குட்டை ஊராட்சிக்குட்பட்ட மொறங் காடு, லட்சுமிபாளையம், சின்னார் பாளையம், செட்டி காட்டூர் ஆகிய பகுதிகளில் ஓடையின் நடுவே ராட் சத மின் கம்பங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நான்கு கிரா மங்களிலும் ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். பல தலைமுறைகளாக அப்பகுதியிலுள்ள 500க்கும் மேற் பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால் நடைகள் வளர்ப்பு பணியில் ஈடு பட்டு வாழ்ந்து வருகின்றனர். தற் பொழுது இந்த கிராமங்களின் வழி யாக, அடிப்படை வாழ்வாதாரங் களை சீர்குலைக்கும் நோக்கத் தோடு ஓடைகள், கோவில்கள், மயா னங்கள், கால்வாய்கள் வழியாக மின் வழிப்பாதைகள், மின் வழித் தடங்கள், மின்கம்பங்கள் அமைக் கும் பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இந்த பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நான்கு ஊரைச் சேர்ந்த கிராம மக்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற எலந்தகுட்டை கிராம சபை கூட்டத் தில், தனியார் நிறுவனத்தின் இந்த திட்டத்தை செயல்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது. இதுதொடர்பாக அரசு அதி காரிகளை சந்தித்து புகாரளித்த நிலையில், கிராமமக்களிடையே குமாரபாளையம் வட்டாட்சியர் தலைமையில் வெள்ளியன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து சனியன்று காலை வட் டாட்சியர் மற்றும், அப்பகுதி சார்ந்த கிராம நிர்வாக அலுவலர், திருச் செங்கோடு துணை காவல் கண்கா ணிப்பாளர் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால், கிராம மக்கள், அதிகாரிகள் வரு வார்கள் என்று பல மணி நேரம் காத் திருந்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் வராததால், ஆவேசம டைந்த கிராமமக்கள் கண்களில் கருப்புத்துணிகளை கட்டி சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், சோலார் மின் நிறுவனத்திற்காக மின்கம்பம் அமைப்பதை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும். விளை நிலங்கள், அதிகளவு கால்நடை கள் உள்ள பகுதிகளில் மின்கம்பங் கள் அமைக்கப்படும் பொழுது, அது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இத்திட் டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும். அதுவ ரையில் தொடர் போராட்டத்தை மேற்கொள்ள இருப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.