மாற்றுத்திறனாளி ஊழியர் மீதான அநீதியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம், ஜூன் 9 – பதவி உயர்வு மறுப்பு, சலுகை கள் மறுப்பு என மாற்றுத்திறனாளி ஊழியரை அவதிக்குள்ளாக்கும், அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கி நிர்வாகத்தை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங் கத்தினர் (TARATDAC) திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் அலுவலராகப் பணியாற்றி வருபவர் ஜோ. டேனி. 50 சதவீதம் உடல்நலம் பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளியான இவர், அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முறையாகப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங் கப்படும் பதவி உயர்வு இவருக்கு பலமுறை வலியுறுத்தியும், ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டுள் ளது. கடந்த 12 வருடங்களாகப் பணி யாற்றி வரும் இவருக்கு எந்த ஒரு பதவி உயர்வும் வழங்கப்பட வில்லை, மற்ற பணியாளர்களுக்கு வழங்கப்படக்கூடிய சலுகைகள், பதவி உயர்வு, பணி மூப்பு பட்டியல் ஆகியவை இவருக்கு மறுக்கப்பட் டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி ஊழி யருக்கு நடந்த அநீதியை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.அமலா ராணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சேலம் அம்மாபேட்டை நகர கூட் டுறவு சங்கத்தின் மீது 81-இன் கீழ் விசாரணைக்கு உத்தரவிட வேண் டும். கூட்டுறவு சங்கத்தின் துணைப் பதிவாளர் அனுப்பிய கடிதத்தின் படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையற்ற பணி யாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணப் பலன்களைத் திரும்ப வசூல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். கூட்டு றவு சங்க துணை விதிகள் 26-இன் படி, ஆண்டுதோறும் பணி மூப்பு பட்டியல் தயார் செய்து வெளி யிடப்படும் நடைமுறையை அமல் படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கத் தில் பணியாற்றக்கூடிய பணியா ளர்களின் பெயரில் நகைகள் அடகு வைக்கக்கூடாது என்ற விதி இருந் தும், விதி மீறி நகைகள் அடகு வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ் ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அகில இந்தியப் பொருளாளர் கே. ஆர். சக்கரவர்த்தி, மாவட்டத் தலை வர் பி. ஹரிகிருஷ்ணன், மாவட் டச் செயலாளர் எம். குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் எம். கனகராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். மூத்த வழக்கறிஞர் பொன். ரமணி போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராள மானோர் பங்கேற்றனர்.