tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கழிவுநீர் கால்வாய் அமைக்க கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

நாமக்கல், மே 10- திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும் கழிவு நீர் கால்வாய் திட்டத்திற்கு, கருப்புக்கொடி கட்டி அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, 1, 7, 8, 10 ஆகிய வார்டுகளிலிருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் மக்கள் பயன்படுத்திய நீர் செல்ல புதிய கால்வாய் அமைக் கும் பணி நகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் நீர்நிலைகளை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு, சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல் வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்ஒருபகுதியாக சனியன்று தங்கள் வீடுகளில் கருப் புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில  தினங்களுக்கு முன்பு, திருச்செங்கோடு பிரதான சாலையில் நடந்த சாலை மறியல் மற்றும் நகராட்சி முற்றுகை போராட் டத்தின் போது, திட்டம் கைவிடப்பட்டதாக நகராட்சி நிர்வாகம் கூறியதாகவும், தற்போது வரை பணிகளை செய்து வருவதா லும், அதனை கண்டிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரி வித்துள்ளனர்.

ரயில் பாதையில் விழுந்த  பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு

மேட்டுப்பாளையம், மே 10 - உதகை மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகளை வெடி வைத்து தகர்த்து, ரயில் பாதையை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத் திற்கும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், வெள்ளியன்று மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் ரன்னி மேடு ரயில் நிலையங்கள் இடையே திடீரென எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு  ரயில் பாதையில் பெரிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன.  இதனால், ரயில் பாதை சேதமடைந்தன. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளியன்று காலை 7.10  மணிக்கு 200 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் இடையில் கல்லாறு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப் பட்டது. மண் சரிவு காரணமாக மலை ரயில் சேவை வெள்ளி  மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் ரத்து செய்யப்பட்டது. இதனை சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் அறிவித்துத் ளது. ரயில்வே உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குன் னூர் மலை ரயில் இருப்பு பாதை இளநிலை பொறியாளர் தலை மையில் ரயில்வே தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று  ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில்  பாதையில் விழுந்து கிடந்த பெரிய ராட்சசப் பாறையை  கம்ப்ர ஸர் மூலம் துளையிட்டு வெடிவைத்து தகர்த்தனர். ரயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரு கிறது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி, ஜங்கமநாயக்கன்பட்டி மற்றும் நல்லூர் ஆகிய குழந்தைகள் மையங்களில் முன்பருவக் கல்வி பயின்று 5 வயது நிறைவுபெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தாயை பிரிந்த குட்டி யானை முகாமிற்கு அனுப்பி வைப்பு

கோவை, மே 10- எட்டிமடை வனப்பகுதியில் தாயை பிரிந்த ஒரு மாத ஆண்  குட்டி யானையை முதுமலை யானை முகாமிற்கு வனத் துறையினர் அனுப்பி வைத்தனர். கோவை மாவட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட நவக்கரை, எட்டிமடை வனப்பகுதிகளில் சனியன்று வனத் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது எட்டிமடை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குட்டி யானை ஒன்று தனியாக சுற்றிக் கொண்டிருந்தது. இதனை கண்ட வனத்துறை ஊழியர்கள் மாவட்ட வன அலுவலர் ஜெய ராஜூக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் மதுக்கரை வனச்சரகர் அருண் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 5 முறை குட்டி யானையுடன் சேர்க்க முயன்ற நிலையில் இரண்டு முறை தாய் யானை குட்டி அருகே வந்து, பின்னர் அழைத்துச் செல்லாமல் விலகிச் சென்றது. இதனால் ஒரு மாத குட்டி என்பதால் தலைமை வன உயி ரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா உத்தரவின் பேரில், எட்டிமடை வனப்பகுதியில் மீட்கப்பட்ட ஒரு மாத குட்டி யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள  யானை கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக குட்டி  யானையின் உடல் நிலை குறித்து கால் நடை மருத்துவ அலுவலர் சுகுமார் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் குட்டி  யானைக்கு பால் மற்றும் உணவு கொடுக்கப்பட்டது.