சட்டப் பாதுகாப்புடன் நெசவுக் கூலி உயர்வு கேட்டு சோமனூரில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரதம்
சட்டப் பாதுகாப்புடன் நெசவுக் கூலி உயர்வு வழங்கக் கேட்டு கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் ஆயிரக்க ணக்கானோர் சோமனூரில் உண் ணாவிரதம் இருந்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்க ளில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் ஆயிரக்க ணக்கானோர் உள்ளனர். இவர்க ளுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கூலி உயர்வு வழங்குவதென ஜவுளி வியாபாரிகள் ஒப்பந்தம் நிறைவேற் றினர். எனினும் அந்த ஒப்பந்தப்படி நெசவுக் கூலி வழங்காமல் கூலி யைக் குறைத்து விட்டனர். இது குறித்து விசைத்தறி உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட நிர்வாகங்களிடம் முறையிட்டும் எவ் வித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் தொடர்ச்சியான விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு ஏற்ப ஜவுளி வியாபாரிகள், விசைத்தறி உரிமை யாளர்களுக்கு புதிதாக கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டும். கடந்த காலம் போல் அல்லாது, சட்டப் பாதுகாப்புடன் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் கால வரையற்ற உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி மையாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு அறிவித்தது. அதன்படி உற் பத்தி நிறுத்தப் போராட்டம் நடத்தி னர். இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் துறை இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்த னர். தொடர் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெற்ற போதும் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வில்லை. இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரி மையாளர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் அடுத்த கட்டமாக ஏப்.11ஆம் தேதி முதல் ஐந்து நாட்க ளுக்கு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறி வித்தனர். அதன்படி சோமனூர் கருமத்தம் பட்டி சாலையில் வெள்ளியன்று காலை உண்ணாவிரதப் போராட் டம் தொடங்கியது. கூட்டமைப்பு சார்பில் சோமனூர் பூபதி தலைமை வகித்தார். இதில் சோமனூர், தெக் கலூர், அவிநாசி, புதுப்பாளையம், கண்ணம்பாளையம், பெருமாநல் லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 2000 பேர் உண் ணாவிரதத்தில் பங்கேற்றனர். கூட்ட மைப்பு செயலாளர் கோபால கிருஷ்ணன், தெக்கலூர் பொன்னு சாமி, அவிநாசி முத்துசாமி, புதுப் பாளையம் நடராஜ், கண்ணம்பா ளையம் வேலுச்சாமி, பெருமாநல் லூர் ராமசாமி உள்பட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண் டனர். கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி ஆகியோர் விசைத்தறியாளர்கள் போராட்டத்தை வாழ்த்திப் பேசி னர். முதல் நாள் போராட்டம் மாலை 6 மணியளவில் முடித்துக் கொள்ளப் பட்டது. மீண்டும் சனியன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் நடை பெறும் என்று கூட்டமைப்பினர் தெரி வித்தனர்.