கோவை,ஏப்.22- ஈஷா யோகா அறக்கட்டளை பள்ளியின் ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்குப் பதியபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017-2019ஆம் ஆண்டில் ஈஷா அறக்கட்டளை நடத்தும் பள்ளியில், பல சந்தர்ப்பங்களில், சக மாணவரால் தன் மகன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை நிர்வாகிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை என அந்த மாணவனின் பெற்றோர் புகாரளித்திருந்தனர்.
இந்நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தின் அறக்கட்டளை நடத்தி வரும் பள்ளியில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பள்ளியின் ஆசிரியர்கள் 4 பேர் மீது பேரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.