பட்டியலின மக்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத்தரக்கோரி ததீஒமு மனு
சேலம், ஏப்.16- பட்டியலின மக்களுக்கு சொந்தமான நிலத்தை, ஆக் கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி சேலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மனு அளித்தனர். சேலம் மாநகரம், தாதம்பட்டி கிராமத்தில் பட்டிய லின மக்களுக்கு சொந்தமான 16.5 ஏக்கர் நிலம் ஆக் கிரமிக்கப்பட்டுள்ளது. இதனை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாதம்பட்டி கிளை சார்பில், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவு பெறப்பட்டுள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, பல்வேறு மனுக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுகளும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. எனவே, உயர்மட்ட அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆணைகளின் படி, விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டியலின மக்க ளின் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தி, புத னன்று சேலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆர். குழந்தைவேல், சிபிஎம் சேலம் கிழக்கு மாநகரச் செய லாளர் கே.பச்சமுத்து, நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கிரில் ஒர்க் செய்யும் தொழிலாளர்களை நல வாரியத்தில் சேர்க்க வலியுறுத்தல்
நாமக்கல், ஏப்.16- கிரில் ஒர்க் செய்யும் தொழிலாளர்களையும் நலவாரி யத்தில் சேர்க்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தனியார் திரு மண மண்டபத்தில் திருச்செங்கோடு கிரில் ஒர்க் இன்ஜினி யரிங் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். கூட்டத்தின் துவக்கத் தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு தினந்தோறும் மாறும் இரும்பு விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும். சங்க உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டம், நலவாரியம் ஆகியவற்றை அமைத்துத்தர வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேட்டுப்பாளையத்தில் கனமழை கல்லூரி, பணிக்கு செல்வோர் அவதி!
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி களான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட இடங்களில் புத னன்று காலை திடீரென பெய்த கனமழையால் மக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையின் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளா யினர். சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்த நிலையில், மேட்டுப் பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமை யான வெயில் நிலவியது. இந்நிலையில், புதனன்று காலை 6 மணியளவில் லேசான தூறலுடன் தொடங்கிய மழை, வெகு விரைவிலேயே பலத்த மழையாக மாறி யது. குளிர்ந்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை யால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி யது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் பணிக்கும், கல்வி நிலையங்களுக்கும் சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சிரமத்துடன் பயணித்தனர். சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரி சலும் ஏற்பட்டது. இருப்பினும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நில விய கடும் வெப்பத்திற்குப் பிறகு பெய்த இந்த மழை, அப்பகுதி மக்களுக்குக் குளிர்ந்த சூழலை ஏற்படுத்தி யுள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்டம்
ஈரோடு, ஏப். 16 – பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரி வாக்க மையத்தை அரசுக்குச் சொந்தமான கட்டிடத் தில் செயல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் புதனன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தை அரசு கட்டிடத்தில் அமைத்திட வேண்டும், அங்கு புதிய ஆராய்ச்சிப் படிப்புகளையும் தொடங்க வேண்டும். தொகுப்பூதிய ஆசிரியர்கள் மற்றும் அலுவ லர்களுக்கு மாதந்தோறும் சரியான நேரத்தில் ஊதி யம் வழங்கப்பட வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் பணி நீட்டிப்பு ஆணையை தாமத மின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் சங்க மண்டல செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் பாலமுருகன் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில், முன்னாள் மாநில தலைவர்கள் பாண்டியன், திரு நாவுக்கரசு, மண்டல செயலாளர் ராஜா, பொருளா ளர் செல்வி உள்ளிட்ட ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல் கலைக்கழக பேராசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திர ளாகக் கலந்து கொண்டனர்.