tamilnadu

img

சானிடைசர் குடித்த வாலிபர் பலி        

கோவை, ஏப்.11- 

போதைக்காக சான்டைசர் குடித்த வாலிபர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் பெர்னார்ட் . இவருக்கு திருமணமாகி மூன்று  குழந்தைகள் உள்ளது. இவர் திருப்பூரில் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்தநிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெர்னார்ட் போதைக்காக கடந்த இரண்டு  நாட்களாக சானிடைசர் குடித்து வந்து உள்ளார். இந்த நிலையில் சனியன்று அதிகாலை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;