கோவை, அக்.25- புதனன்று நிகழ்ந்த சூரிய கிரகணம் பல உலக நாடுகளில் தெரிந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெட்-பாஸோஜ்ஸ் (Hede-Bazouges) பகுதியில் சூரிய கிர கணத்தின் ஒரு பகுதி தெளிவாகத் தெரிந்தது. ரஷ்யாவின் மத்தியப் பகுதி யில் 80 சதவீதம் வரை சூரிய கிர கணத்தைப் பார்க்க முடிந்தது. உலக அளவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.19 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசியா, வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங் கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தில் தெரிந்தது. இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களைத் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிர கணத்தை காண முடிந்தது. தமிழகத்தில் மாலை 5.14 மணிக்கு கிரகணம் தெரியத் தொடங்கியது. 5.44 மணி வரை இது நீடித்தது. நாட்டின் வடமேற்கு பகுதிகளில் அதிக பட்சமாக கிரகணத்தின் போது சந்திரனால் சூரியனை மறைப்பது 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இருந்தது, தமிழக்தில் கோயம்புத்தூர், வேலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சூரிய கிர கணம் தெரிந்தது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவியல் தொலை நோக்கிகள் மூலமாகவும் அறி வியலாளர்கள் வழிகாட்டுதல் அடிப்படை யிலும் பலர் சூரியகிரகணத்தை கண்டு களித்தனர்.