tamilnadu

img

அறிவிக்கப்பட்டு, மேம்பாலம் திறக்கப்படாததால் மக்கள் ஏமாற்றம்

அறிவிக்கப்பட்டு, மேம்பாலம் திறக்கப்படாததால் மக்கள் ஏமாற்றம்

நாமக்கல், மே 7- பள்ளிபாளையத்தில் கட்டப்பட் டுள்ள புதிய மேம்பாலம் திறப்பதற் காக தேதி அறிவிக்கப்பட்டு, அதற் கான ஏற்பாடுகள் முடிந்தும், பாலம் திறக்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். நாமக்கல் – ஈரோடு மாவட்டங்க ளின் எல்லைப்பகுதியில் பள்ளிபா ளையம் அமைந்துள்ளது. இப்பகுதி யில் விசைத்தறி, கார்மெண்ட்ஸ் உள் ளிட்ட தொழில் பிரதானமாக உள் ளது. பள்ளிபாளையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவ ரத்து நெரிசலை குறைத்திடும் வகை யில், கடந்த 2021 ஆம் ஆண்டு அதி முக ஆட்சிக்காலத்தில் பள்ளிபாளை யம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து, திருச்செங்கோடு சாலை ஆலாம்பா ளையம் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.200 கோடி  மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கி யது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலப்பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில், பாலம் திறக் கப்படாமலே இருந்தது. பாலம் திறக்கப்படாததாலும், பாலத்தின் கீழே குறுகிய சாலை இருந்ததாலும், விபத்துகள், முன்பை காட்டிலும் அதிகளவு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. அரசு உரிய நட வடிக்கை எடுத்து பாலத்தை திறக் காவிட்டால், பொதுமக்களுடன் இணைந்து பாலத்தை திறக்க வேண் டிய கட்டாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட் சியினர் தெரிவித்தனர். இந்நிலையில், காணொலி காட்சி  வாயிலாக புதனன்று தமிழக முதல் வர் புதிய பாலத்தை திறந்து வைப்பார்  என திடீரென திங்களன்று மாலை  அறிவிப்பு வெளியானது. இதைய டுத்து திறப்பு விழாவிற்கான ஏற்பா டுகள் வேக வேகமாக செவ்வாயன்று நடைபெற்றது. பாலப்பகுதி முழுவ தும் அலங்கார வண்ண விளக்குகள், கொடிகள், தோரணம் உள்ளிட்ட வற்றை கட்டும் பணியில் நெடுஞ்சா லைத்துறையினர் மற்றும் உள்ளு ரைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் ஈடு பட்டனர். தொடர்ந்து, அப்பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராள மானோர் புதிய பாலத்தின் மேலே  ஏறி நின்று செல்பி எடுப்பது, வீடியோ  எடுப்பது போன்றவற்றை செய்து வந் தனர். தொடர்ந்து, நிகழ்ச்சிக்காக மேடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றபோது, திடீரென மேம் பாலம் திறக்கப்படாது என அறி விப்பு வெளியானது. இதனால் திறப்பு விழா பணியில் ஈடுபட்டி ருந்த ஊழியர்கள் பணியை பாதியி லேயே கைவிட்டு சென்றனர். நிகழ் வுக்காக அமைக்கப்பட்ட மேடையும் உடனுக்குடன் அகற்றப்பட்டது. மேம்பாலம் திறப்பு விழா காணப் படும் என எதிர்பார்ப்போடு இருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஏமாற்றமடைந்தனர்.