மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுவாய் ஊராட்சிக் கிளை கள் சார்பில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட, அகில இந்திய மாநாட்டு நிதி ரூ.60 ஆயிரம், கட்சியின் தென்சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் அ.பாக்கியத்திடம் வியாழனன்று வழங்கப்பட்டது.
பென்சனர்கள் ஆர்ப்பாட்டம் அவிநாசி
மார்ச் 14– அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பென்சனர் கூட் டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பென்சனர்கள் கூட்டமைப்பு வட் டாரத் தலைவர் பழனிசாமி தலைமையில் மாநிலத் தலைவர் இராஜண்ணன், முன்னாள் வட்டாரத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். பலர் கலந்து கொண்டனர்.
சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், சேலம், மேட்டூர் அணை, சின்ன பார்க் பகுதியில் உலக மகளிர் தின விழா வியாழனன்று கொண்டாடப்பட்டது. இதில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் வீ.இளங்கோ, நிர்வாகி செ.கருப்பண் ணன், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்க தலைவர் பாலாம்பிகா, தையல் தொழிலாளர் சங்க கே.தங்கமணி, மாதர் சங்க ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.