tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போலி ரூபாய் நோட்டு மோசடி ஒருவர் கைது, நான்கு பேர் தலைமறைவு '

கோவை, ஜூன் 9- கருமத்தம்பட்டி அருகே மல்டி-லெவல் மார்க்கெட்டிங் முறையில் போலி ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றிய கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார்  கைது செய்தனர். தலைமறைவான நான்கு பேர் மீது தனிப் படைகள் தேடி வருகின்றன. கோவை மாவட்டம், அருகம்பாளையத்தைச் சேர்ந்த உத யகுமார் அளித்த புகாரில், “ரூ.50,000 கொடுத்தால் ரூ.1,00,000  தருவதாகக் கூறி, மோசடி கும்பல் ஜெராக்ஸ் செய்யப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளையும், உள்ளே வெற்றுத் தாள் களையும் கட்டாக வழங்கி ஏமாற்றியது,” எனத் தெரிவித் தார். இதனையடுத்து கருமத்தம்பட்டி சாரதா மில் சாலை  அருகே அடையாளம் தெரியாத நபர்கள் சுற்றுவதாக கிடைத்த  தகவலின் பேரில், ஆய்வாளர் வடிவேல் உத்தரவுப்படி உதவி  ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்  சேகர் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றனர். அப் போது சாரதாம்பாள் நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று,  கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் கண்ணா முன்னிலை யில் ஆய்வு செய்தனர். அதில், நான்கு மூட்டைகளில் 2000  மற்றும் 500 ரூபாய் மதிப்புள்ள ஜெராக்ஸ் நோட்டுக ளுக்கு இடையே வெற்றுத் தாள்கள் இருப்பது கண்டறியப் பட்டது. ரகசியத் தகவலின் அடிப்படையில், தருமபுரி  மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் (36) கைது செய்யப்பட் டார். விசாரணையில், இந்தக் கும்பல் மல்டி-லெவல் மார்க் கெட்டிங் முறையில் நூற்றுக்கணக்கானவர்களை ஏமாற்றி யது தெரியவந்தது. போலி நோட்டுகளை அச்சடிக்க பயன் படுத்திய அதிநவீன பிரிண்டர், பணம் எண்ணும் இயந்தி ரம், செல்போன்கள் மற்றும் கும்பலின் விவரங்கள் அடங்கிய  கோப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கும்பல், வர்த்த கத்தில் சேர விரும்புவோரை நான்கு புதிய நபர்களை அறி முகப்படுத்தச் செய்து, வங்கி காசோலை மூலம் பணம்  பெற்று, போலி நோட்டு கட்டுகளை பார்சலாக அனுப்பியது.  பணம் பெருகும் என்ற ஆசையில் ஏமாந்தவர்கள், இழப்பை  ஈடுகட்ட மேலும் நபர்களை அறிமுகப்படுத்தி மோசடியை விரி வாக்கியுள்ளனர். இந்த மோசடி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்துள்ளது. கருமத்தம்பட்டி உட் கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தங்கராமன், போலி நோட்டு கட்டுகளை பார்வையிட்டார். ஆய்வாளர் வடி வேல் மற்றும் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமை யில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தலைமறை வானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இந்த மோசடியில் எத்தனை பேர் ஈடுபட்டனர், எவ்வளவு பேர்  பாதிக்கப்பட்டனர், மொத்த இழப்பு தொகை உள்ளிட்ட விவ ரங்கள் தலைமறைவானவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர்  தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. பல ஆண்டு களாக இந்தக் கும்பல் பொதுமக்களை ஏமாற்றி, காவல் துறையின் கண்களில் மண்ணைத் தூவியது அப்பகுதி மக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலி முதலீட் டுத் திட்டங்களில் ஈடுபடுவதற்கு முன் முழுமையாக ஆராய்ந்து, அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை மட் டும் தேர்ந்தெடுக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

சாலைத் தடுப்பு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை, ஜூன் 9- அன்னூர் அருகே சத்தி சாலையில் தாசம் பாளையம் பிரிவு பகுதியில் சாலைத் தடுப்பு கள் இல்லாததால் அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து  சத்தியமங்கலம் மற்றும் கர்நாடகா செல் லும் வாகனங்கள் இந்த சாலையை அதிகம்  பயன்படுத்துகின்றன. இதனால், தாசம் பாளையம் பிரிவில் வாகன நெரிசல் அதிக ரித்து, விபத்துகளும் பெருகி வருகின்றன. கடந்த வாரம் ஒரே நாளில் இரண்டு விபத்து கள் நிகழ்ந்தன. முதலில், இரு இருசக்கர வாக னங்கள் மோதிக்கொண்டன. பின்னர், ஆட் டோவும் மற்றொரு இருசக்கர வாகனமும்  மோதிய விபத்து நடந்தது. இந்த விபத்து களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளன. தாசம்பாளையம் பிரிவில் சாலைத் தடுப்பு கள் (பேரிகார்டு) இல்லாததால், அதிவே கத்தில் வரும் வாகனங்கள் உள்ளூர் மக்க ளுக்கு வழிவிடுவதில்லை. இதனால், மெயின்  சாலையில் இருந்து உட்புற சாலைகளுக்கு அவசரமாகத் திரும்ப முயலும் உள்ளூர் மக் கள் விபத்துகளில் சிக்குவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இப்பகுதியில் உடனடியாக சாலைத் தடுப்புகள் அமைக்கவும், வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் காவல் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்டோவை சேதப்படுத்திய யானை

உதகை, ஜூன் 9 – நீலகிரி மாவட்டம், பந்தலூர் அடுத்த பாடந்துறை செதுக்காடி பகுதியில் திங்க ளன்று அதிகாலை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று,  சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட் டோவை ஆக்ரோஷமாகத் தாக்கி சேதப்படுத் தியது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. பந்தலூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இந்த யானை, செதுக் காடி குடியிருப்புப் பகுதி அருகே உலா வந் துள்ளது. அப்போது சாலையோரம் நிறுத்தப் பட்டிருந்த ஓர் ஆட்டோவை தனது தந்தங் களால் முட்டித் தாக்கி சேதப்படுத்தியுள்ளது. யானையின் இந்தச் செயலைக் கண்ட குடி யிருப்புவாசிகள் உடனடியாக சத்தமெழுப் பவே, யானை அங்கிருந்து அகன்றுள்ளது. நல்லவேளையாக, சம்பவம் நடந்த நேரத் தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் பெரும்  அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்ச மடைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளின் நடமாட் டத்தைக் கண்காணிக்க வேண்டும் என்றும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள்  வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத் துள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பெற்ற கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழை வழங்கினார்.

பொதுமக்கள் வாங்கிய நிலத்தை ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீசால்அதிர்ச்சி

கோவை, ஜூன் 9- பேரூர் அருகே 12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலத்தை, ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து கடந்த  2012 இல் சுமார் 90 பேர் பேரூர் பகுதியில் போடப்பட்டிருந்த சைட்டுகளை தலா ரூ.35 லட்சம் என்ற மதிப்பில் வாங்கியுள்ள னர். அனைத்து ஆவணங்களை சரி பார்த்து நிலத்தை வாங்கிய  பொதுமக்கள் அதனை கடந்த 12 ஆண்டுகளாக பயன்படுத்தி  வருகின்றனர். இந்நிலையில் அந்த நிலம் வரும் 18 ஆம்  தேதி ஏலம் விடப்படுவதாக நீதிமன்ற நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நிலத்தை விற்ற  ரியல் எஸ்டேட் உரிமையாளரான சோமசுந்தரம் என்பவரி டம் கேட்டுள்ளனர். அப்போது சோமசுந்தரம் நிலம் வாங்கிய  பவானி சங்கர் என்பவருடன் இருந்த பணம் கொடுக்கல்,  வாங்கல் பிரச்சனையால் தான் நோட்டீஸ் வந்துள்ளதாக வும், அதற்கு தடையாணை பெற்று விடலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சோமசுந்தரம் மீது நடவ டிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் மனு அளித்தனர்.  இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த 2012  இல் இடத்தை நாங்கள் வாங்கும் போது எந்த வில்லங்கமும் இல்லை எனக் கூறி விற்பனை செய்தார்கள். அதற்கான ஆவ ணங்களையும் வழங்கினார்கள். ஆனால் தற்போது திடி ரென வந்துள்ள ஏலம் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எங்க ளது சேமிப்புகளை இதில் முதலீடு செய்துள்ளோம். எங்களி டம் நிலத்தை விற்ற நபருக்கு உள்ள கொடுக்கல் வாங்கல்  பிரச்சனைக்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து  காவல் துறையும், அரசும் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள்  இடத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள னர்.

பொதுமக்கள் வாங்கிய நிலத்தை ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீசால்அதிர்ச்சி

கோவை, ஜூன் 9- பேரூர் அருகே 12 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் வாங்கிய நிலத்தை, ஏலம் விட உள்ளதாக வந்த நீதிமன்ற நோட்டீஸால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் மாநகர  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து கடந்த  2012 இல் சுமார் 90 பேர் பேரூர் பகுதியில் போடப்பட்டிருந்த சைட்டுகளை தலா ரூ.35 லட்சம் என்ற மதிப்பில் வாங்கியுள்ள னர். அனைத்து ஆவணங்களை சரி பார்த்து நிலத்தை வாங்கிய  பொதுமக்கள் அதனை கடந்த 12 ஆண்டுகளாக பயன்படுத்தி  வருகின்றனர். இந்நிலையில் அந்த நிலம் வரும் 18 ஆம்  தேதி ஏலம் விடப்படுவதாக நீதிமன்ற நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நிலத்தை விற்ற  ரியல் எஸ்டேட் உரிமையாளரான சோமசுந்தரம் என்பவரி டம் கேட்டுள்ளனர். அப்போது சோமசுந்தரம் நிலம் வாங்கிய  பவானி சங்கர் என்பவருடன் இருந்த பணம் கொடுக்கல்,  வாங்கல் பிரச்சனையால் தான் நோட்டீஸ் வந்துள்ளதாக வும், அதற்கு தடையாணை பெற்று விடலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சோமசுந்தரம் மீது நடவ டிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் மனு அளித்தனர்.  இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த 2012  இல் இடத்தை நாங்கள் வாங்கும் போது எந்த வில்லங்கமும் இல்லை எனக் கூறி விற்பனை செய்தார்கள். அதற்கான ஆவ ணங்களையும் வழங்கினார்கள். ஆனால் தற்போது திடி ரென வந்துள்ள ஏலம் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. எங்க ளது சேமிப்புகளை இதில் முதலீடு செய்துள்ளோம். எங்களி டம் நிலத்தை விற்ற நபருக்கு உள்ள கொடுக்கல் வாங்கல்  பிரச்சனைக்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து  காவல் துறையும், அரசும் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள்  இடத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள னர்.