tamilnadu

img

ஒரு உணவை உட்கொள்ளக்கூடாது என்பது மனித தர்மத்திற்கு விரோதமானது

 கோயம்புத்தூர்:
மதத்தின் பெயரால் ஒரு உணவை பிறர் சாப்பிடக் கூடாது என்று கூறுவது மனித தர்மத்துக்கு விரோதமானது என கோவையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி.சிவம் கூறினார்.ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறு வனத்தின் சார்பில் ஞாயிறன்று கோவை ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ‘உள்ளதைச் சொல்கிறேன், என் உள்ளத்தைச் சொல்கிறேன்’ நிகழ்வு நடை பெற்றது. இதில் பங்கேற்ற சொற்பொழிவார் சுகி.சிவம் பேசுகையில், ‘தற்போது பலர் உணவு குறித்த கருத்துக்களை தெரிவித்து வரு கின்றனர். மதத்தின் பெயரால் ஒரு உணவை பிறர் சாப்பிடக் கூடாது என்று கூறுவது மனித தர்மத்துக்கு விரோதமானது. மதத்தின் பெயரால் மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என்று கூறக் கூடாது. இந்தியா சமயச் சார்பற்ற நாடாக நீடிக்க வேண்டும். அவரவர்க்கு விருப்பமான உணவை தேர்ந்தெடுத்துச் சாப்பிட உரிமை இங்கு உண்டு. இந்த உணவைசாப்பிடக் கூடாது என்று முடி வெடுக்கும் உரிமை தனி நபருக்கும், அவருடைய மருத்துவருக்கும் மட்டுமே உண்டு” என்றார்.  மேலும் அவர் பேசியதாவது:

எந்த மதத்தில் வேண்டு மானாலும் உள்ள கருத்துக்களை, தத்துவங்களை எடுத்துக் கொள்ள லாம். இன்றைய சமூகத்தில் ஒருவரின் கருத்தினை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், ஒருவர் பேசிய பகுதியை மட்டும் பதிவாகவெளியிட்டு சர்ச்சைகள் ஏற்படுத்தப்படுகிறது. ஒருவரைக் குறித்து விமர்சிப்பதற்கு முன் அவரின் முழுமையான பேச்சினை கேட்டுவிட்டு, எழுத்துக்களைப் படித்து விட்டு விமர்சிக்க வேண்டும். சிறுபதிவினைக் கொண்டு சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரப்பு தல் கூடாது. உறவின் முறையில் தன் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுத்து நல்ல நிலைக்கு உயர்த்தும் சமூகத்தினர் உண்டு. அதே சமயம் தன் சாதி  என்பதற்காக தகுதியற்ற, பிழையானவர்களையும் முக்கியஇடத்தில் கொண்டு வருபவர்களை யும் சமூகத்தில் பார்க்க முடிகிறது. துறவிகள், சந்நியாசிகளிலும் சாதியை பார்த்துக் கொண்டு, கொண்டாடும் பழக்கம் உள்ளது. துறவிகளைக் கொண்டாடாமல் துறவை, தத்துவங்களை கொண்டாட வேண்டும். அதுவே ஞானத்திற்கான வழி.  இளம் தலைமுறை யினர் பலர் ஞானத்தைப் பெறு கிறேன், ஆன்மீக மார்க்கம் செல்கிறேன் என்று சொல்வது தொடர் கிறது. தாங்கள் வாழ்க்கையில் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் சாமியார்களை நோக்கி செல்வது பாவம். இவர்கள் ஒரு நாளும் ஞானத்தையோ, கடவுளையோ அடையவே முடியாது. பெரியவர்களை மதிக்க வேண்டும். முதுமையில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டும். அரும்பாடுபட்டு வளர்த்த நம் பெற்றோர்களுக்கு முதுமையில் தான் துணையாக நிற்க வேண்டும். அப்போது துணையாக இல்லாமல் கைவிட்டுச் சென்றால் எவ்வளவு நற்காரியங்கள், ஆன்மீகத்தில் ஈடுபட்டாலும் அதில் ஒரு பயனும் இல்லை.  குறிப்பிட்ட கோயிலுக்கு போக வேண்டும், இரண்டு மந்திரங்களைச் சொன்னால் போதும் பாவம் போய்விடும் என்ற மனப்பிரமை நம் மக்களிடையே இருக்கிறது. பிறருக்கு துன்பம் இழைக்காமல் வாழ்வதே புண்ணியம். இவ்வாறு சுகி சிவம் பேசினார். 

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன், கங்கா மருத்துவமனை தலைவர் சண்முகநாதன், இயக்குனர் ராஜ சபாபதி, சங்கரா கண் மருத்துவமனை தலை வர் மருத்துவர் ரமணி, பண்ணாரி அம்மன் நிறுவன குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட கோவையின் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.