tamilnadu

img

மருத்துவ ஊழியர்களின் அலட்சியம்: நோயாளிகள் 2 மணி நேரம் காத்திருப்பு

மருத்துவ ஊழியர்களின் அலட்சியம்: நோயாளிகள் 2 மணி நேரம் காத்திருப்பு

கோவை, ஜூன் 2- கோவை மாவட்டம், அன்னூர் அரசு  மருத்துவமனையில் ஊழியர்கள் தாம தமாக பணிக்கு வந்ததால், டோக்கன் வழங்கப்படாமல் நோயாளிகள் சுமார்  இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற் பட்டது. இதனால் சிகிச்சை பெற வந்த  நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி னர். கோவை மாவட்டம், அன்னூர் தாலு காவில் உள்ள அன்னூர் மற்றும் சர்க்கார்  சாமக்குளம் ஆகிய இரண்டு ஊராட்சி  ஒன்றியங்களில் மொத்தம் 30 ஊராட்சி கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகள் அடங்கும். இப்பகுதிகளில் சுமார் 50,000- க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற னர். இவர்களின் மருத்துவத் தேவைக ளுக்கு அன்னூர் அரசு மருத்துவமனை மட்டுமே முதன்மை ஆதாரமாக உள் ளது. தினமும் 1,000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று  வருகின்றனர். மேலும், உயர் சிகிச்சை  தேவைப்படும் நோயாளிகள் கோவை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இன்று (திங்கட் கிழமை) காலை வெளிநோயாளிகள் பிரிவில் டோக்கன் வழங்கும் ஊழியர் கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வர வில்லை என்று தெரிகிறது. இதனால், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக டோக்கன் வழங்கப்படாமல், சிகிச்சைக்காக வந்த நோயாளிகளின் கூட்டம் அதிகரித்தது. தாமதமாக பணிக்கு வந்த ஊழியர்கள் எவ்வித விளக்கமும் அளிக்காமல் டோக்கன் வழங்கும் பணியைத் தொடங்கினர். ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கு நோயாளிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, அன்னூர் அரசு மருத் துவமனையில் உள்கட்டமைப்பு குறை பாடுகள், மருத்துவர்கள் பற்றாக்குறை, தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பும் தரகர்களின்  தலையீடு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகள் இருந்து வரும் நிலையில், மருத்துவமனை ஊழியர்களின் இந்த  அலட்சியப் போக்கு நோயாளிகளி டையே மேலும் பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இத்தகைய சம்ப வங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.