tamilnadu

img

கோவில் குடமுழுக்கிற்கு இஸ்லாமியர்களின் சீர்வரிசை

கோவில் குடமுழுக்கிற்கு இஸ்லாமியர்களின் சீர்வரிசை

கோபி, ஏப்.30- நம்பியூரில் கோவில் குடமுழுக் கின் போது இஸ்லாமியர்கள் கொண்டு வந்து கொடுத்த சீர்வரிசை அனை வரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரோடு மாவட்டம், நம்பியூரில் புகழ்பெற்ற பழமையான தான்தோன் றீஸ்வரர் தபோபத்தினி அம்பாள் கோவிலை நம்பியாண்டார் நம்பி என்ற அரசரால் கட்டப்பட்ட கோவில் என வரலாறுகள் கூறுகின்றனர். இந்த சிறப்பு மிக்க கோவில் இந்து அற நிலைத்துறை கட்டுப்பாட்டில் உள் ளது. இக்கோவிலில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்து குட முழுக்கு செய்ய முடிவு செய்தனர். இதனடிப்படையில் கடந்த 27 ஆம் தேதியன்று விழா தொடங்கி, குட முழுக்கு நடைபெற்றது. இக்கோவிலுக்கு இந்து - முஸ் லிம் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் குடமுழுக்கு விழா  சிறப்பாக நடைபெறவும் இந்து முஸ் லிம் சகோதர ஒற்றுமையை வெளிப் படுத்தும் வகையில் புதனன்று சிறப்பு தொழுகை நடத்தி குடமுழுக்கு விழா விற்கு வெற்றிலை, பாக்கு, பழவகை கள், மாலைகள் என சீர்வரிசை பொருட்களை மேள தாளங்களுடன் கொண்டு சென்று கோவில் நிர்வா கிகளிடமும் அர்ச்சகர்களிடம் வழங்கி னர். அப்போது கோவில் நிர்வாகிகள் அர்ச்சகர்கள் இஸ்லாமிய சகோதர் களை வரவேற்று சால்வை அணி வித்து கோவிலுக்குள் அழைத்து சென்று குடமுழுக்கு சீர்வரிசை பொருட்களை பெற்று கொண்டனர். இந்நிகழ்வு அப்பகுதியில் இந்து -  முஸ்லிம் சகோதரத்துவத்தை வெளிப் படுத்தியது, அனைவரையும் நெகிழ்ச் சியடைய செய்தது.