சிபிஎம் தலைவர்களை போற்றும் இசைப்பேழை வெளியீடு’
கோவையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில், விடுதலைப்போராட்ட வீரர்களான, மார்க்சிஸ்ட் கட்சியின் நவரத்தின தலைவர்களை நினைவு கூறும் வகையில், கோவை வெள்ளளூர் இ.வெ.வீரமணி எழுதி பாடிய பாடலின் இசைப்பேழை வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின் மூத்த தோழர் யு.கே.வெள்ளிங்கிரி வெளியிட, இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஆர்.கல்யாண சுந்தரம் பெற்றுக்கொண்டார். இதில்் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, ஜான்பிரிட்டாஸ் எம்பி, முன்னாள் எம்பி..பி.ஆர்.நடராஜன், மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.